ஓட்டல்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டரின் விலை, கடந்த மூன்று மாதத்தில், 175 ரூபாய் வரை அதிகரித்திருப்பதால், வர்த்தக நிறுவனத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கென இரண்டு வகையான சிலிண்டர்களை வினியோகம் செய்கிறது. வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து, ஏறுமுகமாக இருந்து வருகிறது.வர்த்தக சிலிண்டர் மார்ச் மாதம், 1,240 ரூபாய்க்கு சப்ளை செய்யப்பட்டது. ஏப்ரல் மாதத்தில், 1,270 ரூபாயாகவும், மே மாதத்தில், 1,330 ரூபாய்க்கும் சப்ளை செய்யப்பட்டது. நேற்று, மேலும் 85 ரூபாய் அதிகரித்து, 1,415.90 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களில் சிலிண்டர் ஒன்றுக்கு, 175 ரூபாய் வரை அதிகரித்திருப்பதால், வர்த்தக நிறுவனங்கள் குறிப்பாக ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், சிறு கடைகள் நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வர்த்தக சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிறு கடைகள், ஓட்டல்கள், கார்களில் வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் உபயோகம் அதிகரித்து வருகிறது. தனியார் நிறுவன சிலிண்டர்கள் விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது.பெரிய ஓட்டல்களுக்கு, ஸ்பீக் ஜோதி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் சார்பில், 17 கிலோ எடை கொண்ட சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது. ஆயில் நிறுவனங்களின் வர்த்தக சிலிண்டர்களின் விலை அதிகரித்ததை அடுத்து, தனியார் நிறுவனங்களின் சிலிண்டர் விலையும்
அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம், 980 ரூபாய்க்கும், ஏப்ரலில், 1,006 ரூபாய்க்கும், மே மாதம் 1,031 ரூபாய்க்கும் வழங்கப்பட்ட சிலிண்டர், 87 ரூபாய் அதிகரிப்பு செய்யப்பட்டு, 1,118 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
கடந்த மூன்று மாதத்தில் மட்டும், 138 ரூபாய் வரை தனியார் சிலிண்டர் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதால், ஓட்டல் பொருட்களின் விலையை அதிகரிப்பது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து காஸ் ஏஜன்சி இயக்குனர் ஒருவர் கூறியதாவது:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை காரணம் காட்டி, பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது. டீசல் விலையும் இன்னும் சில தினங்களில் அதிகரிக்கக் கூடும் என, செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், ஆயில் நிறுவனங்கள் வர்த்தக சிலிண்டர்
களுக்கான விலையை அதிகரிப்பு செய்துள்ளதால், தனியார் நிறுவனங்களும் விலையை அதிகரித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply