பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் விநியோகம்

posted in: கல்வி | 0

பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் நான்காம் தேதி முதல் 13ம் தேதி வரை தமிழகத்தில் 13 மையங்களில் வழங்கப்படுகிறது.

இது குறித்து, தமிழக அரசு கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.எட்., சேர்க்கைக்கு, வரும் நான்காம் தேதி முதல், 13ம் தேதி பிற்பகல் மூன்று மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

இரண்டு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உட்பட, ஏழு அரசுக் கல்லூரிகள் மற்றும் ஆறு அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். கவுன்சிலிங் குறித்த விவரங்கள், பின் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்கள் வழங்கப்படும் மையங்கள்:

1. கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்-சைதாப்பேட்டை, சென்னை.
2. வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்-திருவல்லிக்கேணி, சென்னை.
3. அரசு கல்வியியல் கல்லூரி-குமாரபாளையம்.
4. அரசு கல்வியியல் கல்லூரி-ஒரத்தநாடு.
5. அரசு கல்வியியல் கல்லூரி-புதுக்கோட்டை.
6. அரசு கல்வியியல் கல்லூரி-கோவை.
7. அரசு கல்வியியல் கல்லூரி-காந்திநகர், வேலூர்.
8. லட்சுமி கல்வியியல் கல்லூரி-அம்பாத்துறை, காந்திகிராம்.
9. என்.வி.கே.எஸ்.டி., கல்வியியல் கல்லூரி-ஆத்தூர்
10. ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரி-பேர்லாண்ட்ஸ், சேலம்
11. செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி-பாளையங்கோட்டை
12. தியாகராசர் ப்ரீசெப்டார் கல்லூரி-மதுரை.
13. வ.உ.சி., கல்வியியல் கல்லூரி-தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *