சென்னை: பனைப் பொருட்கள் விற்பனைக்கு 16 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பனைப் பொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம், கடந்தாண்டு 12.84 கோடி ரூபாய் மதிப்பில், பனைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, 13.43 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாண்டில் 13.50 கோடி ரூபாய் மதிப்பிலான பனைப் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம், விற்பனை இலக்கு 16.20 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பனைப் பொருட்களில், பனை வெல்லமே பிரதான இடத்தை பிடித்து உள்ளது. பனை வெல்ல விற்பனை கூட்டுறவுகள் 2010-2011ம் ஆண்டில், 10.91 கோடி ரூபாய் மதிப்பிலான பனை வெல்லத்தை கொள்முதல் செய்து, 11.17 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. பதநீர் விற்பனையை அதிகளவில் சந்தைப்படுத்தவும், பல நாட்கள் கெடாமல் பாதுகாத்திடவும், “டெட்ரா’ பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பதநீர், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, பதநீர் விற்பனையை உயர்த்த, தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Leave a Reply