மூத்த வழக்கறிஞர் என். நடராசன் காலமானார் – மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை, பழ.நெடுமாறன் இரங்கல் அறிக்கை

posted in: தமிழகம் | 0

26 தமிழர்கள் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ‘முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற 26 தமிழர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி 19பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவதற்கும், மீதமுள்ள 7பேர் இன்று உயிருடன் இருப்பதற்கும் காரணமான மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்கள் காலமான செய்தி ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது. இராசீவ் கொலை வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் போடப்பட்டதே செல்லத்தக்கதல்ல என்பதை உச்சநீதிமன்றத்தில் தனது வாதத் திறமையால் நிலை நிறுத்திய பெருமைக்குரியவர் மூத்த வழக்கறிஞர் என். நடராசன் ஆவார். அவரின் மறைவு நீதித் துறைக்கும், தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். அவரின் துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சி.பி.ஐ. தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேரின் மரண தண்டனையை தனது திறமையான வாதத்தால் ஆயுள் தண்டனையாக குறைத்தவர் என்.நடராஜன். கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *