குண்டஸ்:ஆப்கானிஸ்தானில், தலிபான்களால் கடத்தி செல்லப்பட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் விடுவிக்கப் பட்டார். இவருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் கொல்லப்பட்டார்.ஆப்கானிஸ்தான் அமைதி பணியில் அமெரிக்கா மற்றும் “நேட்டோ’ படைகள் ஈடுபட்டுள்ளன. கடந்த வாரம் நேட்டோ படைகளுக்கு சொந்தமான டீசல் டேங்கர் லாரியை தலிபான்கள் கடத்தி சென்றனர்.
ஒரு கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த லாரியிலிருந்து சிலர் டீசலை பாத்திரங்களில் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, நேட்டோ விமானப்படை எரி பொருள் டாங்கர் லாரி மீது குண்டு வீசியது. இந்த தாக்குதலில் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்தது. இச்சம்பவத்தில் 70க்கும் அதிகமான மக்கள் பலியாயினர்.
இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க பிரிட்டன் நாட்டை சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நிருபர் ஸ்டீபன் பேரல் ஆப்கனுக்கு சென்றார். மொழி பெயர்ப்பாளர் சுல்தான் முனாடியின் துணையோடு, சம்பவம் குறித்து பேட்டியெடுத்த போது, தலிபான்கள்,ஸ்டீபனை கடத்தி சென்றனர். குண்டஸ் பகுதியில் நிருபரும், மொழிபெயர்ப் பாளரும் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்த “நேட்டோ’ படையினர், ஹெலிகாப்டர் மூலம் அந்த வீட்டை நெருங்கினர்.
இதையடுத்து, தலிபான்கள் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தினர்.” நேட்டோ’ படையினர் பாதுகாப்பாக நிருபரை மீட்டனர். ஆனால், தலிபான்களின் பதிலடி தாக்குதலில் மொழிபெயர்ப்பாளர் பலியானார்.
Leave a Reply