சென்னை : இலவச கண்சிகிச்சை செய்து கொண்ட 11பேர் கண்பார்வை இழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் கண்நோய்க்காக 26 பேர் இலவச கண்சிகிச்சை முகாமில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். சிகிச்சை முடிந்த சில நாட்களில் 11 பேருக்கு கண்களில் எரிச்சலும், பார்வைக் குறைபாடும் இருந்துள்ளன. படிப்படியாக பார்வையும் பறிபோய்விட்டது.
இதனால் பதறிப்போன கிராமத்து மக்கள் இந்த 11 பேரையும் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாக போலீசார் கூறினர் . இவர்களில் நான்குபேருக்கு அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது பாதிக்கப்பட்டவர்களில், ஏழு நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் கண்களிலுள்ள விழித் திரைப்படலமான கார்னியாவை அகற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
Leave a Reply