பள்ளிகளில் நூலக வகுப்பிற்கு நேரம் ஒதுக்கீடு செய்ய உத்தரவு

posted in: மற்றவை | 0

திண்டுக்கல்: பள்ளிகளில் நூலக வகுப்பிற்கு மாணவர்கள் செல்ல நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்த வேண்டும்.

இரண்டு ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும் என சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து இருந்தார். அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், “மாணவ, மாணவிகள் நூலக வகுப்பிற்கு செல்லும் வகையில் பாடவேளைகளில் மாற்றம் செய்து நேரம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *