புவி வெப்பம் குறைக்க வாய்ப்பு இல்லை ? வளர்ந்த – வளரும் நாடுகள் இடையே மோதல்

posted in: உலகம் | 0

tbltopnews1_51441156865கோபன்ஹேகன்: புவிவெப்ப உயர்வு மற்றும் பருவகால மாற்றம் தொடர்பாக உலக அளவில் ஒரே சட்ட வரைவு ஏற்படுத்துவதில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் இடையே கருத்து வேற்றுமை எழுந்துள்ளது. இதனால் கோபன்ஹேகன் மாநாட்டில் பயனுள்ள சட்ட திட்டம் ஏற்படும் என்பதில் சந்தேகமே. இதற்கிடையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எரிபொளில் இருந்து வெளியாகும் வாயு : உலக அளவில் புவியை சுற்றியுள்ள வாயுக்களின் வெப்பம் உயர்ந்து புவியின் வெப்பம் அதிரிக்கரித்து வருகிறது. பனி மலை உருகி ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பருவ மாற்றம் – புவிவெப்பம் பிரச்னையை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆய்வு செய்ய 194 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு கோபன்ஹேகனில் கூட்டப்பட்டுள்ளது. இதில் முக்கிய பிரச்னையாக அந்தந்த நாட்டில் இருந்து வெளியேற்றம் ஆகும் எரிபொருளில் இருந்து வெளியாகும் வாயுக்களை கட்டுப்படுத்துவது என்பது . கரியமில வாயுவை கட்டுப்படுத்துவதில் யார் எவ்வளவு கட்டுப்படுத்துவது என்பதில் பிரச்னை துவங்குகிறது. இந்ந மாநாட்டில் வளர்ந்த நாடுகள் எடுக்கும் சட்ட திட்டங்களை வளர்ந்து வரும் நாடுகளும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஆதரிக்குமா ? : இந்தசட்ட வரைவு குறித்து நேற்றைய கூட்டத்தில் பல்வேறு நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் பங்கேற்று ஆலோசித்தனர். இதில் கியோட்டோ ஒப்பந்தம் சரத்துகள் அதிகமாக அடங்கி இருப்பதாகவும், இதனை ஏற்க இந்தியா தயாராக இல்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் பேசினார். கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் சதவீதம் குறித்து அவர் அதிருப்பதி தெரிவித்தார். இதே நிலையில் சீனாவும், ஆப்பிரிக்காவும் இருப்பதாக இணைந்து எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த பிரச்னையில் இந்தியாவும், சீனாவும் இணைந்து செயலாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கியோட்டோ ஒப்பந்தத்தை ஏற்காத அமெரிக்கா கோபன்ஹேகன் மாநாட்டில் எடுக்கும் முடிவுகளை அப்படியே ஆதரிக்காது என தெரிகிறது.

உலக அளவில் வளர்ந்த நாடுகள் கரியமில வாயுவை குறைக்க தயாராக இருக்கும் அளவை வளர்ந்து வரும் நாடுகள் ஏற்க முடியாது என்பது தற்போதைய பிரச்னை. இதற்கிடையில் மாநாட்டை நடத்தும் ஐ.நா., அமைப்பாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். இது போன்ற குளறுபடிகள் இருக்கும் ரேநத்தில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இம்மாநாட்டில் பங்கேற்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்ற அளவை குறைத்தால் வளர்ச்சி பாதிக்கும் என வளர்ந்து வரும் நாடுகள் அஞ்சுகின்றன. இதே நேரத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இந்த கவலை இல்லை. எப்படியோ உலகை காப்பாற்ற நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டால் உலகம் எதிர்பார்க்கும் உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *