உலக வங்கி, இலங்கைக்கு 77 மில்லியன்கள் டொலர்களை உதவியாக வழங்கும் ஒப்புதலை அளித்துள்ளது. இந்த ஒப்புதல் நேற்று வாசிங்டனில் வழங்கப்பட்டது
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நலத்திட்டங்களுக்காக 65 மில்லியன் டொலர்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் வீதிகளை அபிவிருத்தி செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
வடக்கு,கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், மற்றும் உள்ளுர் பாதைகளை சீரமைத்தல், உட்பட்ட வருமான மற்றும் விவசாய வேலைத்திட்டங்களுக்காக இந்த நிதி உபயோகிக்கப்படவுள்ளது.
Leave a Reply