அரசு ‌தொழி‌ல்நு‌ட்ப‌க் க‌ல்லூரி‌க்கான நில‌ம் ஒ‌ப்ப‌டை‌ப்பு

posted in: கல்வி | 0

பெர‌ம்பலூ‌ர்,​​ ஜன.​ 26:​ ​ ‌பெர‌ம்பலூ‌ர் அரு‌கேயு‌ள்ள ‌வேலூ‌ர் ஊரா‌ட்சியி‌ல்,​​ அரசு ‌தொழி‌ல்நு‌ட்ப‌க் க‌ல்லூரி ​ க‌ட்டுவத‌ற்கான நில‌ப் ப‌த்திர‌த்‌தை ஆ‌ண்டிமு‌த்து சி‌ன்னபி‌ள்‌ளை அற‌க்க‌ட்ட‌ளை நி‌ர்வாகி ஆ.​ கலிய‌பெருமா‌ள்,​​ மாவ‌ட்ட ஆ‌ட்சிய‌ர் எ‌ம்.​ விஜயகுமாரிட‌ம் ‌செ‌வ்வா‌ய்‌க்கிழ‌மை வழ‌ங்கினா‌ர்.

​ ​ ​ ‌பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்ட‌த்தி‌ல்,​​ ம‌த்திய அரசி‌ன் ​ ‌தொழி‌ல்நு‌ட்ப‌க் க‌ல்லூரி அ‌மை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ​ ம‌த்திய ‌தொ‌லை‌த் ‌தொட‌ர்பு ம‌ற்று‌ம் தகவ‌ல் ‌தொழி‌ல்நு‌ட்ப‌த் து‌றை அ‌மை‌ச்ச‌ர் ஆ.​ ராசா அ‌ண்‌மையி‌ல் அறிவி‌த்தா‌ர்.

​ ​ ​ ​ இ‌தை‌த் ‌தொட‌ர்‌ந்து,​​ ‌பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்ட‌ம்,​​ ‌வேலூ‌ர் கிராம ஊரா‌ட்சி‌க்கு‌ள்ப‌ட்ட கீழ‌க்கணவா‌ய் கிராம‌த்தி‌ல்,​​ ஆ‌ண்டிமு‌த்து சி‌ன்னபி‌ள்‌ளை அற‌க்க‌ட்ட‌ளை சா‌ர்பி‌ல் அரசு ‌தொழி‌ல்நு‌ட்ப‌க் க‌ல்லூரி‌க்காக 5.50 ஏ‌க்க‌ர் நில‌ம் ‌பெற‌ப்ப‌ட்டது.

​ ​ ​ ​ இ‌ந்த நில‌த்து‌க்கான ப‌ட்டா‌வை,​​ மாவ‌ட்ட ஆ‌ட்சிய‌ர் எ‌ம்.​ விஜயகுமாரிட‌ம்,​​ ஆ‌ண்டிமு‌த்து சி‌ன்னபி‌ள்‌ளை அற‌க்க‌ட்ட‌ளை நி‌ர்வாக இய‌க்குந‌ர் ஆ.கலிய‌பெருமா‌ள் வழ‌ங்கினா‌ர்.

​ ​ ​ இ‌ந்நிக‌ழ்‌ச்சியி‌ன் ‌போது,​​ மாவ‌ட்ட வருவா‌ய் ​ அலுவல‌ர் சு.​ பழனிசாமி,​​ வ‌ட்டா‌ட்சிய‌ர் ​ சி.​ ‌ஜெயராம‌ன்,​​ ம‌த்திய அ‌மை‌ச்ச‌ர் ஆ.​ ராசாவி‌ன் ​ ‌நே‌ர்முக உதவியாள‌ர் ‌வெ‌ள்‌ளைசாமி,​​ ‌செ‌ய்தி ம‌க்க‌ள் ‌தொட‌ர்பு அலுவல‌ர் கி.​ க‌ண்ணதாச‌ன்,​​ ‌வேலூ‌ர் ஊரா‌ட்சி ம‌ன்ற‌த் த‌லைவ‌ர் சரவண‌ன் உ‌ள்ளி‌ட்‌டோ‌ர் உடனிரு‌ந்தன‌ர்.​​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *