பொன்சேகாவின் உண்ணாவிரதம் பற்றி எதுவும் தெரியாது: இலங்கை ராணுவம்

posted in: உலகம் | 0

fonsekaகொழும்பு, மார்ச் 8: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவின் உண்ணாவிரதம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என இலங்கை ராணுவச் செய்தித்தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்சேகாவுக்கு 3 வேளை உணவுகளையும் அவரது மனைவி அனோமாவே எடுத்துச் செல்வதால், அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறாரா என்பது பற்றி தெரியாது என சமரசிங்க தெரிவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு செல்போன் பயன்படுத்த அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *