பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் முறைப்படி தன்னை விவாகரத்து செய்யும் வர அவரை விட மாட்டேன் என்று ஆயிஷா கூறியுள்ளார். அவர் கொடுத்த புகார் காரணமாக சோயிப் மாலிக்கிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தானிலும் சோயிப் மாலிக் மீது வழக்கு தொடர ஆயிஷா முடிவு செய்துள்ளார். இதற்காக ஆயிஷா வக்கீல் ஏற்பாடு செய்துள்ளார். பாகிஸ்தானிலும் கிரிமினல் வழக்குகளை சந்திக்க வேண்டும் என்பதால் சோயிப் மாலிக்கிற்கு நெருக்கடி முற்றி உள்ளது.
சானியா திருமணத்துக்கு கோர்ட்டு இடைக்கால தடை?
சோயிப் மாலிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதால், சானியா மிர்சாவுடன் 15-ந் தேதி நடத்த இருக்கும் திருமணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆயிஷா தரப்பு வக்கீல் கோர்ட்டை நாடியுள்ளார். இதனால் சானியா மிர்சா, சோயிப் மாலிக் திருமணத்துக்கு கோர்ட் இடைக்கால தடை விதிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இது சானியா மிர்சாவுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சோயிப் மாலிக் கைது செய்யப்படுவதை தடுக்கும் முயற்சிகளில் சானியா மிர்சா ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
சோயிப் மாலிக், ஆயிஷா இருவரும் தங்கள் திருமண விஷயத்தில் தவறு செய்து விட்டனர். இருவரும் குற்றவாளிகள் என்று இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. டெலிபோன் திருமணத்தை முஸ்லிம் சட்ட வாரியம் ஏற்றுக் கொள்கிறது. அதே சமயத்தில் அதில் பிரச்சினை எழுந்ததும் உடனடியாக முஸ்லிம் பெரியவர்களை நாடி, பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆயிஷா மிகவும் காலதாமதம் செய்து விட்டார் என்று முஸ்லிம் சட்ட வாரியம் கூறியுள்ளது.
Leave a Reply