மின் கட்டணம் உயர்வு குறித்து, மதுரையில் மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக மின்வாரிய தலைவர் சி.பி.சிங் பேசியபொழுது மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் உயரும் என்று தெரிவித்துள்ளார்.
சி.பி.சிங் பேசியதாவது:
தமிழகத்தில் மின் உற்பத்தியை விட தேவை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பற்றாக்குறையை போக்க தனியாரிடம் இருந்து பல கோடி ரூபாய் கொடுத்து மின்சாரத்தை பெறுகிறோம். இதனால்தான் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மின்சாரம் வாங்க மட்டும் ரூ.4,000 கோடி வரை செலவு செய்துள்ளோம். ரூ.8,000 கோடி மின் உற்பத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்கு வீடுகளில் 100 யூனிட் வரையும், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனத்தில் 750 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு மின் கட்டணத்தில் மாற்றம் செய்யவில்லை. இதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்டுக்கு அதிகபட்சமாக யூனிட்டுக்கு ரூ.1 மட்டும் உயர்த்தப்படும்.
Leave a Reply