சென்னை: சமீபத்திய டில்லி பயணத்தின் போது தமிழகத்திற்கு தேவையான அரிசி குறித்து காலையில் கேட்டேன் மாலையில் அரிசி வந்தது என சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது காங்., எம்.எல்.ஏ., எழுப்பிய கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் எ.வ., வேலு பதில் அளித்து பேசுகையில்; தமிழகத்திற்கு ஆண்டுக்கு 3 லட்சத்து 17 ஆயிரம் டன் அரிசி தேவைப்படுகிறது. மத்திய அரசு 2 லட்சத்து 96 ஆயிரத்து 453 டன் அரிசி வழங்குகிறது. ஏனைய அரிசியை வெளிச்சந்தை விலைக்கு வாங்கப்படுகிறது என பதில் அளித்தார். ஒரு ரூபாய் அரிசித்திட்டம் காரணமாக மாதம்தோறும் , 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் டன் அரிசி வரை கூடுதலாக தேவைப்படுகிறது. ஆண்டுக்கு 2 லட்சத்து 37 ஆயிரம் டன் அரிசி தேவைப்படுகிறது.
இந்த தேவை குறித்து சமீபத்தில் டில்லி சென்ற முதல்வர் கருணாநிதி மத்திய அரசிடம எடுத்து கூறினார். இதனையடுத்து முதல்வர் கேட்டார், உடனடியாக மத்திய அரசு கூடுதல் அரிசி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார். இந்த கூடுதல் அரிசியும் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. என்றார். உடனனே குறுக்கிட்டு எவ்வளவு அரிசி கிடைத்துள்ளது என்பதை முதல்வர் கருணாநிதி சபையில் விளக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் நான் டில்லியில் காங்., தலைவர் சோனியாவை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான அரிசி குறித்து எடுத்து சொன்னேன். அவர்கள் கவனிப்பதாக காலையிலே சொன்னார்கள். நான் இங்கு வந்து மாலையில் சேர்ந்தேன் அரிசி அனுப்பப்பட்டது என்ற செய்தி எனக்கு முன்னதாக ( மாலையில் ) இங்கு வந்து சேர்ந்து விட்டது. மொத்தமாக 2 லட்சத்து 50 ஆயிரம் டன் அரிசியும், 65 ஆயிரம் டன் கோதுமையும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Leave a Reply