காபூல்: ஆப்கானிஸ்தானில் பயணிகள் சென்ற விமானம் ஒன்று வானில் வெடித்து சிதறியது . இதில் இருந்த 40 பயணிகள் இறந்து விட்டதாக அந்நாட்டு உள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
வடக்கு ஆப்கனில் காபூல் – குண்டூஸ் இடையே பறந்து சென்று கொண்டிருந்தபோது , விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. பின்னர் இந்த விமானம் அங்கு இருந்த மலைப்பகுதியில் மோதியது. இதில் இருந்த பயணிகள் உடல் கருகி இறந்து விட்டனர். அனைவரும் வெளிநாட்டு பயணிகள் ஆவர். இந்த தகவலை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
பயணிகள் விவரம் இன்னும் அறியப்படவில்லை. கடந்த வாரம் லிபியாவில் விமானம் நொறுங்கி விழுந்ததில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாயினர் இந்நிலையில் இன்று மே<லும் ஒரு விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது.
Leave a Reply