தெலங்கானா பகுதியில் தான் மேற்கொண்ட சுற்றுப் பயணம் அரசியல் நோக்கத்திலானது என்று நிரூபித்தால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனான ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தை உயிரிழந்தபோது, தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். தனித் தெலங்கானா கோரிக்கைக்கு எதிர் கொள்கை உடைய ஜெகன்மோகன் ரெட்டி, இப்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தெலங்கானா ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் மேற்கொண்ட சுற்றுப் பயணம் தனிப்பட்ட முறையிலானது என்றும், தனது தந்தை உயிரிழந்தபோது, தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவே தற்போது தான் முயற்சி மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். இந்தப் பயணம் அரசியல் நோக்கம் கொண்டது என்று நிரூபித்தால் தனது பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply