ஈரோடு : மஞ்சள் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. செவ்வாய் கிழமையன்று ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை குவிண்டால் ஒன்று ரூ. 17, 029 ஆக வியாபாரமானது.
மஞ்சள் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை தொடர்ந்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே மாதத்தில் மஞ்சள் விலை ரூ. 1000 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் இறுதியில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ. 16,000 மாக இருந்தது. மஞ்சள் தேவை அதிகரித்துள்ளதால் குவிண்டாலுக்கு ரூ. 550 வரை புதன் கிழமையன்று அதிகரித்ததாக ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவிசங்கர் தெரிவித்தார்.
Leave a Reply