இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! கோத்தாபயவுக்கு இந்தியா வருமாறு இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் அழைப்பு

posted in: உலகம் | 0

இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்கு இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இலங்கை இராணுவத்தின் 1400 பேருக்கு இந்தியாவின் பாதுகாப்புப் பல்கலைக்கழகங்களில் முதற்கட்டமாக மேலதிகப் பயிற்சிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் இலங்கை விமானப்படையின் அறுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் வைபவங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய விமானப்படைத் தளபதி நாயக் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

அதற்கு மேலதிகமாக பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் இந்திய- இலங்கை இராணுவத்தினரிடையே நேரடித் தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் விடுத்த கோரிக்கையும் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *