உயிர் காக்க 108; உயிர் போனால் 110′

posted in: மற்றவை | 0

திண்டுக்கல் : அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை, உரியவர்களின் வீடுகளில்

கொண்டு போய் சேர்க்க, “ஆம்புலன்ஸ் 110 இலவச சேவை’யை, அரசு துவக்க உள்ளது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த சுகாதார திட்ட அதிகாரி விஜயகுமார், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனை இணை இயக்குனர்கள், கண்காணிப்பாளர்களுடன், டெலிகான்பரன்ஸ் முறையில், ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில், குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், எடை குறைவாக, நோயுள்ள குழந்தைகளை பராமரிக்க, ஒவ்வொரு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும் சிசு பராமரிப்பு மையம் துவக்குவது. விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடுபவர்களையும், பிரசவத்திற்கு வருபவர்களையும் காப்பாற்றுவதற்காக, 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுவது போல, விபத்து மற்றும் நோய் வாய்ப்பட்டு, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இறப்பவர்களின் உடல்களை, அவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கு, “110 இலவச ஆம்புலன்ஸ் சேவை’யை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *