எச்-1பி விசா கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

வாஷிங்டன்:இந்தியர்கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள், அரசு நிர்ணயித்த இலக்கை எட்டி விட்டதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.


அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை தற்காலிகமாக வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்காக, அரசு சார்பில் ‘எச்-1பி’ விசாக்கள் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு 65 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், இந்த விசாக்களை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த 2008 பொறுத்தவரை, ஏப்., 8ல், 65 ஆயிரம் என்ற இலக்கை விண்ணப்பங்கள் எட்டின. 2009ல் டிச., 21ல் இந்த இலக்கு எட்டப்பட்டது. இந்நிலையில், 2011ம் நிதியாண்டுக்கான ‘எச்-1பி’விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக பெறப்பட்டு வந்தன. கடந்த நான்கு வாரங்களுக்குள்ளேயே, ஏராளமான விண்ணப்பங்கள் வந்து குவிந்து விட்டன. தற்போது, விசா கோரி வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை எட்டி விட்டது.இவ்வாறு அமெரிக்க குடியேற்ற துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *