மொபைல் போன் மூலம் விரும்பியவரின் கணக்கிற்கு 5 நிமிடத்தில் பணப்பரிமாற்றம்

posted in: மற்றவை | 0

சிவகாசி: மொபைல் பாங்க் மூலம் விரும்பியவரின் கணக்கிற்கு 5 நிமிடத்தில் பணம் அனுப்பும் வசதி ஸ்டேட் பாங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிவகாசி டவுன் கிளை ஸ்டேட் பாங்க் சார்பில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் வங்கி முதன்மை மேலாளர் ஏ. சீனிவாசன் தலைமையில் நடந்தது.

மண்டல மேலாளர் எம். தேவசேனாதிபதி பேசியதாவது: ஸ்டேட் பாங்கில் சிறு மற்றும் குறு தொழில் துவங்க, உடனே கடன் வசதியும், ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு “எஸ்.பி.ஐ., கேர்’ திட்டத் தில் 20 சதவீதம் கூடுதல் கடனும், “ஹெல்ப்’ திட்டத்தில் 8 சதவீத வட்டியில் தவணைக்கடனும் வழங்கப்படும். சிவகாசி கிளையில் “மல்டி சிட்டி செக்’ வழங்கப்படுகிறது. இதற்கு “கலெக்சன் சார்ஜ்’ இல்லை. எல்லா கிளைகளிலும் “மல்டி சிட்டி செக்’ வழங்கப்படும். “மொபைல் பாங்க்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மொபைல் போன் மூலம் பிற கணக்குகளுக்கு 5 நிமிடத்தில் பணம் அனுப்பலாம். ஒரு நாளைக்கு 5000 ரூபாய் என மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் மொபைல் பாங்க் திட்டத்தில் அனுப்பலாம். பாங்குக்கு வந்து 5 நிமிடத்தில் மொபைல் பாங்க் வசதியை பெறலாம், என்றார்.
நிகழ்ச்சியை பாங்க் அலுவலர் அமலா தேவி தொகுத்து வழங்கினார். மேலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *