ஆசிரியர்களின் சொத்து விவரம்: பள்ளிக்கல்வித்துறை சேகரிப்பு

posted in: மற்றவை | 0

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும்

ஆசிரியர்கள் சொத்து உட்பட, அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை வழங்கிய விண்ணப்பத்தில், ஆசிரியர்களின் தனித்திறன் கவிதை, பேச்சு, நாடகம், விளையாட்டு, இசை, கற்பனை ஆற்றல், கம்ப்யூட்டர் பயிற்சி பற்றி கேட்கப்பட்டுள்ளன. குடும்ப நிலவரம், ஓட்டுனர் உரிமம் உள்ளதா, அதனுடைய வரிசை எண், டூவீலர், கார் ஓட்ட தெரியுமா, தற்செயல் விடுப்பு தவிர மற்ற அனைத்து விடுப்பு விவரம், ஒழுங்கு நடவடிக்கைகள், ஆசிரியர்களின் உயரம், எடையளவு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டு, மார்க் பட்டியல், அசையும், அசையா சொத்துக்கள், கடன் உட்பட, பல விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை நிரப்பி, இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *