எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம ராணுவத் தளபதியுமான தமிழ் ஈழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார் என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் வெளியகப் பணிப் பிரிவின் பொறுப்பாளர் கதிர் காமத்தம்பி அறிவழகன், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
‘எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம ராணுவத் தளபதியுமான தமிழ் ஈழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார். தேசியத் தலைவரை பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த, தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள எங்கள் புலனாய்வுப் போராளிகள், வேறு துறைப் போராளிகள் மற்றும் இலங்கை படைத்துறையின் உயர்மட்டத்துடன் தொடர்புடைய எங்கள் தகவலாளர்கள் ஆகியோர், இந்த வீரமரணத்தை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.
கடந்த மே மாதம் 15ம் தேதி, முதல் 19ம் தேதி வரையான காலப் பகுதியில் வன்னி-முள்ளிவாய்க் கால் பகுதிகளில் இருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இல்லாததாலும், அங்கிருந்து வெளியேறிய எங்கள் புலனாய்வுப் போராளிகள் பாதுகாப் பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்ததாலும், அவர்களால் அனுப் பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே கிடைத்திருந்தன. அப்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில், பிரபாகரன் நலமாக இருப் பதாக மே மாதம் 22ம் தேதி தீர்மானித்தோம். பிரபாகரனின் பாதுகாப் பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக இறுதி வரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப் பட்டு வந்தன. அவற்றின் அடிப்படையிலேயே எங்கள் இயக்கத்தின் அனைத்துலக உளவுத்துறையின் இயக்குனர் செல்வராஜா பத்மநாதன் ஆரம்பத்தில் இருவேறு முரண்பட்ட செய்திகளை தரும் சூழ்நிலைக்கு தள் ளப்பட்டிருந்தார் என்பதையும் உணர முடிகின்றது. பிரபாகரனின் மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை மே 22ம் தேதி வெளியிட்டதற்காக வருத் தப்படுகிறோம்.
பிரபாகரன் மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும், சரண் அடைந்ததாகவும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அந்த தகவலை முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத் துறையினர் ஆகிய எங்களுக்கு உண்டு. பிரபாகரன் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. அவர் இலங்கை படையினருடன் போரிட்டே மரணம் அடைந்தார் என்பதையும் நாங்கள் மிகத் திடமாக உறுதிப்படுத்துகிறோம். இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில், நமது கைகளில் தந்துவிட்டு சென்றுள்ள எங்கள் விடுதலைப் போராட்டத்தை, அதே உறுதிப்பாட்டுடனும், அதே கட்டுக் கோப்புடனும், அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
எங்கள் போராட்டத்தின் அடுத்த நிலையாக தற்போது உருவாக்கப்பட உள்ள ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லாரும் சேர்ந்து பணியாற்றுவதே எங்கள் முன் உள்ள கடமை. பிரபாகரனுடன் மரணமடைந்த போராளிகள், தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன், இந்த போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை தனது வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.’ இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply