தமிழீழக் கனவு இன்னும் கலையவில்லை: இலங்கை ராணுவ தலைமைத் தளபதி
கொழும்பு, பிப். 15: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போரில் மாண்ட போதிலும், தனித் தமிழீழத்தை வலியுறுத்துபவர்களின் கனவு இன்னும் கலையவில்லை என, இலங்கை ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா கூறினார்.