ஆந்திராவில் அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு : பணியாற்ற மந்திரிகள் மறுப்பு
ஐதராபாத் : தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஆந்திர மாநில அமைச்சர்கள், தங்கள் பணிகளை செய்ய மறுப்பதால், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை போராட்டக் குழு, இன்று முதல் காலவரையற்ற “பந்த்’திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், தெலுங்கானா பகுதிகளில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.