சிங்கூர் நிலத்தைத் தரத் தயார், ஆனால்… டாடா நிபந்தனை

கொல்கத்தா: உரிய நஷ்ட ஈடு கொடுத்தால் சிங்கூர் நிலத்தை திருப்பித் தந்துவிடுவதாக டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார். மேலும் இப்போதைக்கு மேற்கு வங்கத்தில் எந்த முதலீடும் செய்யும் திட்டமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

பெண்களுக்காக பெண்களே நடத்தும் கோர்ட்:ஆணாதிக்க உ.பி.,யில் புரட்சி

posted in: கோர்ட் | 0

லக்னோ:பெண்களுக்காக பெண்களே ஆரம்பித்து நடத்தும், “கோர்ட்’ உ.பி.,யில் செயல்படுகிறது. பெண்களின் பிரச்னைகள் குறித்து, வாத பிரதிவாதங்களைக் கேட்டு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.உ.பி., மாநிலத்தில் சித்தாபூர் மாவட்டத்தில் இந்த பெண்கள் “கோர்ட்’ அமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, கிராமப் பெண்களுக்கு உள்ள சிறிய பிரச்னைகள் குறித்து தான் இந்த கோர்ட்டில் வாதிடப்படுகிறது. இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்தப் பெண்கள் அளிக்கும் தீர்ப்பும் ஏற்றுக் … Continued

காப்பீட்டு திட்டத்தின் நோய்கள் பட்டியல் ஊராட்சிகளில் வைக்க அமைச்சர் உத்தரவு

posted in: அரசியல் | 0

விழுப்புரம் : “காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படும் 51 வகையான நோய்கள் பட்டியலை, ஒவ்வொரு ஊராட்சியிலும், பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்’ என, அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில், அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

ஐ.ஐ.டி., விரிவுரையாளர் ஆக பிஎச்.டி., தேவையில்லை

posted in: கல்வி | 0

புதுடில்லி: ஐ.ஐ.டி.,க்களில் விரிவுரையாளராகப் (லெக்சரர்) பணியாற்ற பிஎச்.டி., படிப்புத் தகுதி, இனி தேவையில்லை என்ற முடிவுக்கு, கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ‘கிரேடு’ முறை அமல்: கபில் சிபல்

posted in: கல்வி | 0

‘நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் ‘கிரேடு’ முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என’, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

ராபர்ட் போஸ்ச் இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனம் கோவையில் தடம் பதிக்கிறது

கோவை : சர்வதேச அளவில் தனக்கென இன்ஜினியரிங் சர்வீசில் தனி முத்திரை பதித்துள்ள ராபர்ட் போஸ்ச் இன்ஜினியரிங் நிறுவனம் இந்தியாவில் 170 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.

தேக்கடிக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்து 50 பேர் பலி

posted in: மற்றவை | 0

கேரள மாநிலம், தேக்கடி ஏரியில் படகு கவிழ்ந்து 83 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களில் சுமார் 50 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

கோயம்பேடு திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தப்புள்ளிக்கு ராம்கி – அந்தோனி நிறுவனங்கள் போட்டி

சென்னை : சென்னை கோயம்பேட்டில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோயம்பேடு காய்கறி- பழங்கள் மார்க்கெட்டை சுத்தமாக பராமரிக்கவும், திடக் கழிவு மேலாண்மை செய்யவும், மற்றும் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும், ஒப்பந்தப்புள்ள கோரப்பட்டுள்ளது.

இந்தியாவைத் தாக்க பெனசிர் ஆவல்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : கடந்த 1990ம் ஆண்டு, பாகிஸ்தானின் அணுஆயுத கூடங்கள் தாக்கப்பட்டால், இந்தியாவின் அணுஆயுத வசதிகளை தாக்க, தயாராக இருக்குமாறு, பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் பெனசிர் பூட்டோ, விமானப் படைக்கு உத்தரவிட்டிருந்தார். இத்தகவலை, அந்நாட்டு ராணுவ முன்னாள் தலைமை ஜெனரல் மிர்சா அஸ்லம் பெக் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் இந்தியாவை நோக்கி 165 ஏவுகணைகள்

posted in: உலகம் | 0

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய 165 ஏவுகணைகளில் ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் மாற்றம் செய்துள்ளது. இந்தியாவை குறி வைத்து இவை அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.