சுப்ரீம் கோர்ட்டில் எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் வழக்கு : கமிஷன் முறையை மாற்றக்கூடாது

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : எல்.ஐ.சி.,ஏஜன்ட்களுக்கு வழங்கப்படும் கமிஷன் முறையை மாற்றி, அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர்.

சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

posted in: கோர்ட் | 0

கோல்கட்டா : வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பத்து வயது சிறுமியை, நீதிபதியே, கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் கோல்கட்டா கோர்ட்டில் நடந்தது. தனது தந்தையுடன் வசிக்க வேண்டும் என்ற, அந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசையையும் நீதிபதி நிறைவேற்றி வைத்தார்.

வெளிநாட்டினர் தத்தெடுக்கும் குழந்தைகள்: கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

மும்பை : “சர்வதேச தத்தெடுத்தல், அதாவது வெளிநாட்டிற்கு தத்தெடுத்து செல்லும் குழந்தைகள், பின்னர் கைவிடப்பட்டு இந்தியாவிற்கு திரும்பும் சூழ்நிலையில், அவர்களை பராமரிக்க தேசிய குழந்தைகள் நலநிதி ஒன்றை அமைக்க வேண்டும்’, என மும்பை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.

விதிமீறல்-5 பொறியியல் கல்லூரிகள் மீது சிபிஐ வழக்கு

posted in: கோர்ட் | 0

சென்னை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் 5 பொறியியல் கல்லூரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

சுய உதவி குழுக்களுக்கு கழிவுகற்களை வழங்கும் தொழில் துறை செயலாளர் உத்தரவு : ஐகோர்ட் கிளை இடைக்கால தடை

posted in: கோர்ட் | 0

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிரானைட் கழிவு கற்களை பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு வழங்கும் தொழில் துறை செயலாளர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.

பெண் குழந்தைகளை பெற்றவருக்கு நிதி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை: தேனி மாவட்டம் போடியை சேர்ந்த, இரு பெண் குழந்தைகளை பெற்றவருக்கு நிதி வழங்கும்படி சமூக நலத்துறையினருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. போடியை சேர்ந்த பிருந்தா தாக்கல் செய்த ரிட் மனு:

கிங் இன்ஸ்டிடியூட் இடம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதற்கு கோர்ட் தடை

posted in: கோர்ட் | 0

சென்னை: சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தில், தனியாருக்கு பட்டா வழங்க அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித் துள்ளது.

பஸ்களில் விளம்பரம் தமிழக அரசு முடிவு

posted in: கோர்ட் | 0

சென்னை : “பஸ்களில் விளம்பரம் செய்வது குறித்து, தேவைப் பட்டால், மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படும்’ என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் உயர் அதிகாரிகள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை : போலீஸ் – வக்கீல் மோதல் சம்பவத்தில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

சென்னை : “ஐகோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவத்திற்கு முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணி, முன்னாள் துணை கமிஷனர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் காரணம். இவர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், நித்யானந்தம், வனிதா, சுமதி, சாந்தி, ஸ்ரீபிரியா, சரளாதேவி, சவுந்திரவள்ளி, விருதுநகரை சேர்ந்த பரமசிவம், சேதுராமன் ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட்: