மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை: தமிழைக் கற்பிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து

posted in: கல்வி | 0

“மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், தமிழ் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். அப்படி, தமிழை கற்பிக்காத பள்ளிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட்., வகுப்பிற்கு அனுமதி மறுப்பு

posted in: கல்வி | 0

கம்பம்: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட்., உள்ளிட்ட படிப்புகளுக்கு தேசிய கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ‘மொபைல்’ போன் தடை: ஆசிரியர்களுக்கும் பொருந்தும்

posted in: கல்வி | 0

ஆமதாபாத்: பள்ளி வளாகத்தில் மொபைல் போனில் பேச சி.பி.எஸ்.இ., நிர்வாகம் தடை விதித்துள் ளது. மொபைல் போனை விட்டு பிரிய முடியாத சூழ் நிலை மக்களிடையே நாளு க்கு நாள் வளர்ந்து வருகிறது.

மெட்ரிக் பள்ளிகளுக்கு டிசம்பரில் புது கட்டண விகிதம்

posted in: கல்வி | 0

தனியார் பள்ளிகள் கட்டணம் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டப் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. முதற்கட்டமாக, தனியார் பள்ளிகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை சேகரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 2 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

ஆசிரியராக பணியாற்றுவோர் பி.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம்

posted in: கல்வி | 0

மதுரை : தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் பி.எட்., படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இப்பல்கலை மூலம் 2009 – 11ம் கல்வி ஆண்டில், தற்போது பணியில் உள்ள 1000 ஆசிரியர்களுக்கு பி.எட்., கற்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி 2ம்கட்ட கவுன்சிலிங்: 6,000 இடத்துக்கு விண்ணப்பமே இல்லை

posted in: கல்வி | 0

சென்னை: ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான முதல் கட்ட கவுன்சிலிங்கில் 11 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 ஆயிரம் இடங்களில் அறிவியல் பிரிவில் 6,000 இடங்களுக்கு விண்ணப்பங்களே இல்லை. அதனால், 4,000 இடங்களை மட்டும் நிரப்புவதற்கான இரண்டாம்கட்ட கவுன்சிலிங், வரும் 24, 25 தேதிகளில் திருச்சியில் நடக்கிறது.

யு.பி.எஸ்.சி., – எஸ்.எஸ்.சி., தேர்வு எழுத பெண்களுக்கு இனி கட்டணம் கிடையாது

posted in: கல்வி | 0

புதுடில்லி: மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் யு.பி.எஸ்.சி., மற்றும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் உள்ளிட்ட தேர்வு எழுத ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அனிமேஷன்’ துறையில் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த எதிர்காலம்!: சென்னை கருத்தரங்கில் தகவல்

posted in: கல்வி | 0

“சென்னை: “”இந்தியாவில் வளர்ந்து வரும் துறை அனிமேஷன். இத்துறையை தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு வேலை வாய்ப்பும், நல்ல எதிர்காலமும் உள்ளது,” என்று “அனிமேஷன்’ துறையின் எதிர்காலம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட சோனி இமேஜ் ஒர்க் இந்தியா நிறுவனத்தின் “டிஜிட்டல் எபக்ட்ஸ்’ மேற்பார்வையாளர் சோபன்பாபு தெரிவித்தார்.

துணைவேந்தர்களை நீக்க சட்டத்தில் இடமில்லை :சொல்கிறார் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி

posted in: கல்வி | 0

சென்னை : “”துணைவேந்தர்கள் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ, பதவி நீக்கம் செய்யவோ பல்கலைக் கழக சட்டத்தில் இடமில்லை,” என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.