பொறியியல் படிப்பிற்கு பெண்களிடம் ஆர்வம் குறைவு

posted in: கல்வி | 0

சென்னை: பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் நேற்று “ரேண்டம்’ எண் வழங்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர் களை விட அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இன்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயம்! : கடந்த ஆண்டு போல 3 வகை நீட்டிப்பு

posted in: கல்வி | 0

சென்னை : “”பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் தொடரும் என, நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி நிர்ணயித்துள்ளது,” என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, “ரேண்டம்’ எண் வழங்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.

கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை

posted in: கல்வி | 0

சென்னை: “கல்லூரியிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு கட்டணம் மற்றும் “டிசி’யை திருப்பித் தர மறுக்கும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது.

கணிதத்திற்கும் செய்முறை மதிப்பெண்*பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்

posted in: கல்வி | 0

சென்னை:இயற்பியல், வேதியியல் பாடங்களை போல, கணித பாடத்திற்கும் செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.தமிழகத்தில் முதல்முறையாக சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநில மாதிரி கணித ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

கல்வி கட்டணம் ரத்து செய்தும் பயனில்லை: வசூலில் தீவிரம் காட்டும் உதவி பெறும் பள்ளிகள்

posted in: கல்வி | 0

கல்வி கட்டணம் ரத்து செய்த பின்னரும் கூட, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பள்ளிகளில் சிறப்பு கட்டணம் உட்பட கல்வி கட்டணத்தை அரசு ரத்து செய்தது.

1100 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கினார் முதல்வர்

posted in: கல்வி | 0

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் வழியில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,100 மாணவர்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி லேப்-டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விடாது படிப்பு: பள்ளிப் படிப்பை 90 வயதில் முடித்த சூப்பர் பாட்டி

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரைச் சேர்ந்த எலினார் பென்ஸ் என்ற பெண்மணிக்கு 90 வயது. 15 பிள்ளைகள், 54 பேரக் குழந்தைகள், 37 கொள்ளுபேரன், பேத்திகள் கண்டவர். இந்த வயதில், கொள்ளுபேரன், பேத்திகளைப் பார்த்தப் பிறகு தன்னுடைய பழைய கனவு ஒன்றை இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் பென்ஸ்.

பெண்கள், ஏழை, உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு பி.இ., கட்டணம் ரத்து:தமிழக அரசு முனைப்பு

posted in: கல்வி | 0

பெண்கள், ஏழை மாணவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பி.இ. கல்விக் கட்டணத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இச்சலுகை அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

மதுரை அருகே டி.புதுப்பட்டியில் புதிய சமுதாய வானொலிக்கு அனுமதி

posted in: கல்வி | 0

டெல்லி: மதுரை அருகே டி.புதுப்பட்டி கிராமத்தில் புதிய சமுதாய வானெலி அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அனுமதியை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. கிராமப்புற சமுதாயங்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சமுதாய வானொலிக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது. இந்த சமுதாய வானொலி மூலம் உள்ளூர் சமுதாய மக்கள் … Continued

இளம் விஞ்ஞானிகளுக்கு ஆய்வுக்கூட்டம்

posted in: கல்வி | 0

சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கழகம், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் மற்றும் ராஜிவ் இளைஞர் மேம்பாட்டுக் பல்கலைக் கழகம் இணைந்து, “இந்திய அறிவியல் காங்கிரஸ்’ என்ற அமைப்பை உருவாக்கி, அதன் சார்பாக, பருவநிலை மாற்றம் தொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் இளைஞர் மேம்பாட்டுக் பல்கலைக் கழகத்தில்,