பிளஸ்டூ தேர்வில் குளறுபடியான கேள்விக்கு முழு மார்க்-தேர்வுகள் துறை இயக்குநர்
சென்னை: பிளஸ்டூ தேர்வில் கணிதத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகள் சரியான முறையில் அச்சாகாமல் இருந்ததால் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து தற்போது அந்த கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.