கூடுவாஞ்சேரி அருகே ரயில்வே கிராசிங்கில் பேருந்து சிக்கியதால் பரபரப்பு

posted in: மற்றவை | 0

சென்னை அருகே தண்டவாளத்தில் மாநகர பஸ் சிக்கிக்கொண்டது. அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 45 நிமிடம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பயங்கரவாதிகளிடம் நவீன தொழில்நுட்பம்: ஏ.கே. அந்தோனி எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

பயங்கரவாதிகள் காலத்துக்குத் தகுந்தவாறு புதிய யுத்திகளை வகுத்தும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் தங்களை வலுப்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் செயல்பாடு நாளுக்கு நாள் கடுமையாக உள்ளது என்றார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி.

18ம் தேதி விமானங்கள் ஸ்டிரைக்!-அரசை மிரட்டும் தனியார் விமான நிறுவனங்கள்

posted in: மற்றவை | 0

மும்பை: நஷ்டத்தைச் சமாளிக்க தங்களுக்கும் நிதிச் சலுகைகள் வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதியிலிருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்தப் போவதாகவும் தனியார் விமான நிறுவனங்கள் மிரட்டல் விடுத்துள்ளன.

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: இலங்கை உளவுப் பிரிவு

posted in: மற்றவை | 0

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக இலங்கை உளவுப் பிரிவு தகவலை மேற்கோள் காட்டி ஈழத் தமிழர் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

20 ஆண்டுகள் பணியாற்றினால் தான் ஓய்வூதியம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி:அரசு பணியில் தொ டர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றினால் தான் ஓய்வூதியம் பெற முடியும் என, மத்திய நிர்வாகத் தீர்பாயம் தெரிவித்துள்ளது.டில்லி அரசு போக்கு வரத்துக் கழகத்தில் 1982ம் ஆண்டு முதல் 93ம் ஆண்டு வரை கண்டக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் முகேஷ்.

43,000 ச.கி.மீ. இந்திய நிலம் சீனா வசம் உள்ளது: எஸ்.எம்.கிருஷ்ணா தகவல்

posted in: மற்றவை | 0

இந்தியாவுக்கு சொந்தமான 43 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம் சீனாவின் வசம் உள்ளது. மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:

கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை தொடங்கிவிட்டது: மன்மோகன்

posted in: மற்றவை | 0

வெளிநாடுகளில் நமது நாட்டவர் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கின்னஸ் பட்டியலில் இடம் பெற்றது ராமநாதபுரம் சகோதரர்களின் சாதனை

posted in: மற்றவை | 0

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சகோதரர்களின் சாதனை கின்னஸ் பட்டியலில் இடம் பெற்று, அதற்கான சான்றிதழை அந்நிறுவனம் அனுப்பியுள்ளது. ராமநாதபுரம் கற்பக விநாயகம் கோவில் அர்ச்சகர் வெங்கட்ராமன், சரோஜா தம்பதியரின் மகன்கள் சுந்தர், சங்கரநாராயணன்.

தாஜ் ஓட்டல் சலவையாளரின் ஆண்டு சம்பளம் ரூ.1.5 கோடி

posted in: மற்றவை | 0

மும்பை: மும்பையில் உள்ள தாஜ் ஓட்டல் சலவையாளர் ஓராண்டில் ஒரு கோடியே 53 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.மும்பையில் உள்ள தாஜ் மகால் பேலஸ் ஓட்டலில் 1974ம் ஆண்டு முதல் சலவையாளராக இருப்பவர் பெர்வேஸ் பெஸ் டோன்ஜி சாகர்(60).