ஐ.நா. அமைதிப்படையில் 8 ஆயிரம் இந்திய வீரர்கள்

posted in: மற்றவை | 0

இந்தியா 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைக்கு அனுப்பி உள்ளது என வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதன்கிழமை தெரிவித்தார். மக்களவையில் எழுத்து மூலம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது:

குடும்ப கௌரவத்துக்காக பெண்களை கொல்வது அவமானகரமானது: ப.சிதம்பரம்

posted in: மற்றவை | 0

குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெண்களை கொல்வது உள்பட அவர்களுக்கு எதிராக வன்கொடுமை நிகழ்த்தப்படுவது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் அவமானமான செயல் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

பணிநீக்க உத்தரவால் வேதனையில் தவிக்கும் தற்காலிக டைப்பிஸ்டுகள்

posted in: மற்றவை | 0

மதுரை: அரசுத் துறைகளில் தற்காலிக பணியில் உள்ள டைப்பிஸ்டுகள் அரசின் பணிநீக்க உத்தரவால் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களில் பணியாற்ற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இவர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

25 ஆண்டுக்குப் பின் கொச்சி-கொழும்பு கப்பல்!

posted in: மற்றவை | 0

கொழும்பு: கொழும்புக்கும், கொச்சிக்கும் இடையே விரைவில் கப்பல் சேவை தொடங்கும் என்று இலங்கை போக்குவரத்து அமைச்சர் டல்லஸ் அழகப்பெருமா கூறியுள்ளார்.

ந்தியாவின் முதல் அணுஉலை நீர்மூழ்கி கப்பல்: பிரதமர் தொடங்கி வைத்தார்

posted in: மற்றவை | 0

இந்திய கடற்படையில் அணுசக்தி மூலம் இயங்கும் முதல் நீர்மூழ்கி கப்பலை இணைக்கும் விழா விசாகப்பட்டினத்தில் நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குருசரண் கௌர் ஆகியோர் நீர்மூழ்கிக் கப்பலை தொடங்கி வைத்தார்.

முதல் முறையாக எல்லை பாதுகாப்பு படையில் பெண்கள்

posted in: மற்றவை | 0

பாதுகாப்புத்துறையில் படிப்படியாக அடியெடுத்து வைத்த பெண்கள் இப்போது சவால்கள் நிறைந்த எல்லை பாதுகாப்பு படையிலும் இடம் பிடித்து உள்ளனர்.

முல்லை பெரியாற்றில் புதிய அணை-கேரள சட்டசபையில் தீர்மானம்

posted in: மற்றவை | 0

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரி கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு டைரக்டர் சீமான் எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

சென்னை : “”தமிழ்ப் பெண்களுக்கு மறைமுகமாக கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இலங்கை அரசின், “வடக்கின் வசந்தம்’ திட்டம் தொடர்பாக ஆலோசனை கூற, தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் போகக்கூடாது; மீறினால் அவரது வீடு, அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்,” என்று சினிமா டைரக்டர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலப்பு திருமணம் செய்தால் இலவச மின்சாரம்

posted in: மற்றவை | 2

தேனி : கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு அரசு பல்வேறு உதவித்தொகை, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதில் முன்னுரிமை போன்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

ஓட்டுப்பதிவு நேரம் காட்டும் புதிய இயந்திரம் : இடைத்தேர்தலில் பயன்படுத்த கமிஷன் முடிவு

posted in: மற்றவை | 0

சென்னை : “”ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இவற்றில், எந்த நேரத்தில் எவ்வளவு ஓட்டுகள் பதிவாகின என்பதை தெரிந்து கொள்ளலாம்,” என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.