பஸ் எங்கே வருகிறது மொபைல் போன் சொல்லும்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: உள்ளூர் பஸ் இன்னும் வரலியா… கவலையே வேண்டாம்; மொபைல் போனை எடுங்க; பட்டனை அழுத்துங்க; திரையில் பாருங்க, எந்தெந்த பஸ், எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும். ஆனால், இந்த வசதி, சென்னையில் அல்ல; டில்லியில்.

தமிழகத்துக்கு ரிலையன்ஸ் எரிவாயு கொண்டு வர மந்திரி அழகிரி திட்டம்

posted in: அரசியல் | 0

“தமிழக உரத்தொழிற்சாலைகளில் நாப்தா மூலம் உரங்களைத் தயாரிப்பதற்கு பதிலாக, இயற் கை எரிவாயு மூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பேசி, கேஜி பேசினில் கிடைக்கும் எரிவாயுவை தமிழகத்திற்கும் வழங்க வேண்டுமென கேட்க இருக்கிறேன்’ என்று அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : ஆதரவும் – எதிர்ப்பும்

posted in: கல்வி | 0

மாணவர்களின் பாடசுமையை குறைக்கும் வகையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில், தனது அமைச்சக கொள்கை முடிவை வெளியிட்டு, 100 நாட்களில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாநில கல்வி வாரியங்களுடன், ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. … Continued

டாக்டர்கள் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த அன்புமணி கோரிக்கை

posted in: மற்றவை | 0

சென்னை: டாக்டர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக தமிழக அரசு டாக்டர்களுக்கும் சலுகைகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

லைசன்ஸ் இல்லாத ஜெட் ஏர்வேஸ் பைலட்!

posted in: மற்றவை | 0

நெடும்பச்சேரி (கேரளா): காலாவதியான உரிமத்துடன் ஜெட் ஏர்வேசின் ஜெட்லைட் விமானத்தில் பணியாற்றிய துணை விமானி தரையிறக்கப்பட்டார். அவருக்குப் பதில் வேறு ஒரு துணை விமானி வரவழைக்கப்பட்டு பின்னர் விமானம் தொடர்ந்து பறந்தது.

இலங்கை-இப்போதைக்கு ஐ.எம்.எப் கடனுதவி இல்லை!

posted in: மற்றவை | 0

ஐ.நா.: இலங்கை கோரியுள்ள கடனுதவி குறித்து இதுவரை சர்வதேச நிதியம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இந்திய மாணவருக்குதவ 24 மணி நேர ‘ஹெல்ப் லைன்’ சேவை : ஆஸியில் நடவடிக்கை

posted in: உலகம் | 0

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு உதவ 24 மணி நேர ‘ஹெல்ப் லைன்’ சேவை உருவாக்கப்படும் என்று அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன்’ என்று கூறிய பிரபல சோதிடர் நாலாம் மாடியில் தடுத்து வைப்பு

posted in: மற்றவை | 0

புலிகளின் தலைவர் பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி விரைவில் கலையும் என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறிய சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2 ஆண்டில் 143 அமெரிக்க கம்பெனிகளை இந்திய நிறுவனங்கள் வாங்கி சாதனை

posted in: மற்றவை | 0

புதுடில்லி: பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா சிக்கித்தவித்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண் டுகளில் அந்நாட்டை சேர்ந்த 143 நிறுவனங்களை இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் வாங்கிப் போட்டுள்ளன.

நம் எதிரி இந்தியா அல்ல, தலிபான் தான்: சர்தாரி

posted in: உலகம் | 0

லண்டன்: பாகிஸ்தானின் மிகப் பெரிய எதிரி தலிபான்தான். இந்தியா அல்ல என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீண்டும் கூறியுள்ளார்.