ஈராக்-30ம் தேதி முதல் யுஎஸ் படைகள் வெளியேற்றம்
பாக்தாத்: ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் வரும் 30ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற துவங்குகின்றன. இதை கொண்டாடும் விதமாக ஈராக் வரும் 29ம் பொது விடுமுறை அறவித்துள்ளது.
பாக்தாத்: ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் வரும் 30ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற துவங்குகின்றன. இதை கொண்டாடும் விதமாக ஈராக் வரும் 29ம் பொது விடுமுறை அறவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் துறையின் தலைவராக இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலகேணி நியமிக்கப்பட்டுள்ளார்.
விமானநிலையத்துக்கு தாமதமாக வந்த விமானப்படை மருத்துவரை, மும்பைக்கு புறப்பட இருந்த விமானத்தில் ஏற்றுவதற்கு அதிகாரிகள் மறுத்தனர். இதை அடுத்து போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விமானத்தை நிறுத்தினார் அந்த மருத்துவர். அவரை காவல்துறையினர் கைது செய்தனர். வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்த இச் சம்பவத்தால் பெங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி பாசனப் பகுதியில் உள்ள அணைக்கட்டுகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் தற்சமயம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான கணபதி என்கிற கோடீஸ்வரராவ் வங்கதேசத்திற்கு தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.
கோவை : கோவைக்குற்றாலத்தில் சுற் றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், சூழல் சார்ந்த சுற் றுலா மேம்பாட்டுப் பணிகளை வனத்துறை மேற் கொண்டு வருகிறது.
திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே சாண எரிவாயு அடுப்பில், பால் பொருள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உச்சப்பட்டி கிராமத்தில், “கோடை பார்ம்ஸ்’ என்ற பாலாடைக் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, நான்கு சாண எரிவாயு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு : முல்லைத் தீவில் விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்திருந்த நூறு கிலோ தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கை ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: முல்லைத் தீவில் நடந்த இறுதிக் கட்ட தாக்குதலுக்கு பின், விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டனர். அந்த பகுதியில் தற்போது ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
டெல்லி: நாட்டில் மாவோயிஸ்ட் நக்ஸலைட்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.
டெல்லி: தேசிய அளவில் உயர் கல்வியை சீர்திருத்தம் செய்ய உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. ஒரு வெட்டியான குழுவாகிவிட்டதால் அதை கலைத்துவிடுமாறு மத்திய அரசுக்கு யஷ்பால் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.