காற்றுப்புக முடியாத அறைக்குள் வைத்து கூட்டமைப்பினரை பூட்ட வேண்டும் – அமைச்சர் மேர்வின் சில்வா

posted in: மற்றவை | 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்களை காற்று புக முடியாத அறைக்குள் வைத்து பூட்ட வேண்டும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

ஏன் பெண் என்று படைத்தாய் இறைவா?: தாலிபான்களின் கொடுமை – விடியோ

posted in: மற்றவை | 0

பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்துவரும் கொடுமைகளுக்கு இந்த விடியோவும் சாட்சி. இஸ்லாமிய மதக்கோட்பாடுகளைக் கடைபிடிக்கிறோம் என்கிற பெயரில் பெண்களுக்கு எதிராக அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் கொஞ்சமும் மனிதாபிமானம் இருப்பதில்லை.

ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் துவங்கியது

posted in: மற்றவை | 0

தமிழ்நாட்டிலேயே வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்திற்கு குடிநீர் வழங்கும் 616 கோடி ரூபாய் மதிப்பிலான காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நேற்று முதல் செயல்படத் துவங்கியது.

புத்தர் மறுஅவதாரம் எடுத்திருக்கிறாரா?

posted in: மற்றவை | 0

புத்தர் மறுஅவதாரம் எடுத்துவிட்டார் என்கிறார்கள். நேபாள நாட்டுக் காட்டுக்குள், அடர்த்தியான பகுதி ஒன்றில் கடந்த ஓராண்டாக தவம் புரிந்துவரும் 17 வயதான ராம் பகதூர் பம்ஜான் என்ற வாலிபரைத்தான் நேபாள பிக்குகள் புத்தராக கருதுகிறார்கள். கீர்த்தி சிறிதானாலும் மூர்த்தி பெரிதாகத் தெரியும் இந்த வாலிப சாமியாரைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். ஆசிர்வாதம் பெற்று திரும்புகிறார்கள்.

கனடா எம்.பி.,யை அனுமதிக்காது திருப்பி அனுப்பியது இலங்கை

posted in: மற்றவை | 0

கொழும்பு:விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என கனடா நாட்டைச் சேர்ந்த எம்.பி., ஒருவரை, இலங்கை அரசு நேற்று திருப்பி அனுப்பியது.இலங்கையில், ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 25 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்ததாக கடந்த மாதம் 18ம் தேதி அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.

விபத்துக்குள்ளான விமானம் கண்டெடுப்பு: வீரர்களின் சடலங்கள் மீட்பு

posted in: மற்றவை | 0

அருணாசலப் பிரதேசம் அருகே செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான இந்திய விமானப் படையின் சரக்கு விமானத்தையும், அதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 13 பேரின் சடலங்களும் புதன்கிழமை மீட்கப்பட்டன.

துப்பாக்கியால் கசாப் சுட்டதை பார்த்தேன்: சிறுமி சாட்சியம்

posted in: மற்றவை | 0

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பொதுமக்களை நோக்கி சரமாரியாகச் சுட்ட இரு நபர்களில் அஜ்மல் கசாபும் ஒருவர் என்று தீவிரவாதிகள் சுட்டதில் கால் ஊனமடைந்த தேவிகா ரொடாவன் (10) என்ற சிறுமி, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

ஐ.டி. நிறுவனங்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு வரிச் சலுகை: பிரதமரிடம் ஆ. ராசா கோரிக்கை

posted in: மற்றவை | 0

மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்று தொலைத் தொடர்பு மற்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் அசிங்கமான கட்டடம்?!

posted in: உலகம் | 0

உலகில் அழகான கட்டடங்கள் ஆயிரம் இருக்க, அசிங்கமான கட்டடம் எது என்று கேட்டால் வடகொரியாவில் உள்ள ரியூக்யாங்க் ஓட்டலை காட்டுகின்றன அந்த ஊர் பத்திரிகைகள். வடகொரியா, பியாங்யாங் நகரில் இருக்கிறது 105 மாடிகளை கொண்ட ரியூக்யாங்க் ஓட்டல். கிட்டத்தட்ட 20 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் நிற்கும் இந்தக் கட்டடம்தான் உலகின் அசிங்கமான கட்டடம் எனக் கருதப்படுகிறது.

உயிருடன் இருப்பேன்… பெட்?!: 10 ஆயிரம் பவுண்ட் வென்ற புற்றுநோயாளி

posted in: மற்றவை | 0

மனிதன் என்றால் தன்னம்பிக்கை வேண்டும். நோயாளி என்றால் மருந்துக்கு பதில் தன்னம்பிக்கையை மாத்திரையாகக் கொடுத்தால் போதும் எழுந்து உட்கார்ந்துவிடுவான். இதற்கு உதாரணமாக திகழும் ஜான் மாத்யூஸ் அந்த தன்னம்பிக்கையையே காசாக்கி விட்டார் என்றால் அவருடைய திறமையை என்னவென்பது.?