விஜயகாந்த் தங்களது தொகுதியில் போட்டியிடக் கோரி தொண்டர்கள் மனு

posted in: அரசியல் | 0

சென்னை: தங்களுக்காக சீட் தரக் கோரி மனு செய்வதை விட தங்களது அபிமானத் தலைவர்களுக்கு சீட் தரக் கோரி தொண்டர்கள் மனு செய்வது தற்போது புதிய பேஷனாகியுள்ளது.

கருணாநிதியிடம் தோற்ற ராகுல் காந்தியின் ‘பார்முலா’!

posted in: அரசியல் | 0

சென்னை: திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக் கட்டையை நீக்க தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் சென்னை வருவார் என்று தெரிகிறது.

தொகுதி பங்கீட்டை இறுதி செய்கிறார் ஜெ., : 4ம் தேதி விஜயகாந்துடன் சந்திப்பு

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தே.மு.தி.க.,வுடனான தொகுதி பங்கீடு அறிவிப்பு, வரும் நான்காம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்!-மே 13ல் தான் ‘ரிசல்ட்’!!

posted in: அரசியல் | 0

டெல்லி: தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

வீரமணி மூலம் திமுக விட்ட மறைமுக ‘வார்னிங்’ எதிரொலி-இறங்கி வருகிறது காங்.

posted in: அரசியல் | 0

சென்னை: இனியும் குட்டக் குட்டக் குனிய வேண்டாம். துணிச்சலுடன் முடிவெடுங்கள் என்று தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை, திமுக விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

விருத்தாச்சலத்தில் மீண்டும் போட்டியிட அச்சம்-தொகுதி மாறும் விஜயகாந்த்?

posted in: அரசியல் | 0

சென்னை : கடந்த சட்டசபைத் தேர்தலில் கடுமையாக முட்டி மோதியும், விருத்தாச்சலத்தில் மட்டுமே தேமுதிகவுக்கு வெற்றி கிடைத்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள்

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் அக்கட்சி அதி்முக கூட்டணியில் இடம் பெற்று 9 தொகுதிகளில் போட்டியிட்டது நினைவிருக்கலாம்.

மாநகராட்சி புதிய திட்டம்: ரூ. 500 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை; மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

posted in: அரசியல் | 0

துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாநகராட்சியின் புதிய திட்டங்கள் தொடக்க விழா சைதாப்பேட்டையில் நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜெயலலிதாவின் உறுதிமொழி

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழகத்தில் விரைவில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுடைய சலுகைகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா … Continued

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதும் இல்லை-கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.