11 நாட்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் சந்திரசேகர ராவ் : தனி தெலுங்கானா உருவாக்க மத்திய அரசு சம்மதம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் தெரிவித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மத்திய அரசு பணிந்தது. இதையடுத்து, சந்திரசேகர ராவ் தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

தெலுங்கானா கேட்டு போராடும் சந்திரசேகர ராவ் சீரியஸ்: தனி மாநிலம் வழங்குவது குறித்து காங்., தீவிர பரிசீலனை

posted in: அரசியல் | 0

தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு, சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவின் உடல்நிலை சீரியசாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆந்திராவில் பெரிய அளவில் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 110 ஆரம்ப சுகாதார நிலையங்கள் : அமைச்சர் பன்னீர்செல்வம்

posted in: அரசியல் | 0

நடுவீரப்பட்டு : தமிழகத்தில் புதிதாக 110 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கடலூர் அடுத்த வெள்ளக்கரை ஊராட்சி வி.காட்டுபாளையத்தில் இலவச கலர் “டிவி’ வழங்கும் விழா நடந்தது.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைஅமைப்பதே லட்சியம்: வாசன்

posted in: அரசியல் | 0

சென்னை:””தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நம் லட்சியம். அதற்கேற்ப நாம் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்,” என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசினார்.

அடுத்த ஐந்தாண்டில் கட்டாய உயர்நிலை கல்வி : கபில் சிபல் தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : அடுத்த ஐந்தாண்டில் உயர்நிலைப் பள்ளி கல்வியை அடிப்படை உரிமையாக்க, மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

புவிவெப்பம்: விழிப்புணர்வுக்காக எவரெஸ்ட்டில் கேபினட் கூட்டம்!

posted in: அரசியல் | 0

காத்மாண்டு: புவிவெப்பம் குறித்த விழிப்புணர்வுக்காக நேபாள நாட்டு அமைச்சரவைக் கூட்டம் இன்று எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு நேபாள அமைச்சர்கள் திரண்டுள்ளனர்.

வன்முறையை கைவிட்டால் பேச்சு: நக்சல்களுக்கு சிதம்பரம் நிபந்தனை

posted in: அரசியல் | 0

புதுடில்லி: “”நக்சலைட்கள் வன்முறையைக் கைவிடும் வரை, அவர்களுடன் பேச்சு இல்லை,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சிதம்பரம் கூறியதாவது:

பொது வினியோக திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் : பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: “”உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதை சமாளிக்க வேண்டும் என்றால், பொது வினியோகத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தான், சாதாரண மக்கள் நிவாரணம் பெற முடியும்,” என, அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

பள்ளிகளில் சாலை பாதுகாப்பு பாடம்: முதல்வர் வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

சென்னை:””பள்ளி அளவிலேயே, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை பற்றிய பாடம் இடம்பெற வேண்டும்,” என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.சாலை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற போக்குவரத்து மேலாண்மை பற்றிய தேசிய கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.

மும்பை தாக்குதலில் பலியான வீரர்கள் குடும்பங்களுக்கு பெட்ரோல் ‘பங்க்’ உரிமம்:

posted in: அரசியல் | 0

மும்பை: மும்பைத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பெட்ரோல் “பங்க்’ உரிமம் வழங்கும் நடவடிக்கை தீவிரமாக நடப்பதாக மத்திய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.