சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ஜனாதிபதி பிரதிபா நம்பிக்கை

posted in: அரசியல் | 0

புதுடில்லி:சந்திரனுக்கு ஆளில்லாத விண்கலமான சந்திரயான்1 அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,” என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நம்பிக்கை தெரிவித்தார்.டில்லியில், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச வர்த்தக கண்காட்சியை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைத்தார்.

3 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பிற்கு மேலூரில் டிராக்டர் தொழிற்சாலை : மு.க. அழகிரி ஆய்வு

posted in: அரசியல் | 0

மதுரை : மேலூர் அம்பலக்காரன்பட்டியில் டிராக்டர் தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பலக்காரன்பட்டியில் 266 ஏக்கர் பரப்பில் டிராக்டர் தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்கான இடத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இந்தோனேசிய தொழில் அதிபர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.

அரசியல்வாதிகளுக்கு ஊழல் பயம் போய்விட்டது: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன்

posted in: அரசியல் | 0

ஊழல் செய்தால் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற பயம் அரசியல்வாதிகளிடம் இப்போது இல்லை என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.முருகன் தெரிவித்தார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற “காந்திய அரசியல் இயக்கம்’ தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:

இனத்தை அழித்துவிட்டு மொழிக்கு மாநாடு எதற்கு? -தகிக்கிறார் ‘தமிழருவி’ மணியன்

posted in: அரசியல் | 0

அக்டோபர் 2… காந்தியின் பிறந்தநாள் மட்டும் அல்ல. ’காந்திய அரசியல் இயக்கம்’ பிறக்கப் போகும் நாளும்கூட.

திறமையான ஆசிரியர்கள் கிடைப்பதில் சிரமம்: பிரதமர் மன்மோகன் வெளிப்படை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “நாட்டில் புதிதாக அமைக்கப் பட்டு வரும் ஐ.ஐ.டி.,க்கள், ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றிற்கு, திறமை வாய்ந்த ஆசிரியர்களை ஈர்ப்பது பெரும் பிரச்னையாக உள்ளது’ என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இந்தியாவில் தொழில் துவங்க அழைப்பு – அமைச்சர் அழகிரி

posted in: அரசியல் | 0

சென்னை: “”இந்தியாவில் தொழில் துவங்க மலேசியா, இந்தோனேசியா தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,” என்று, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி கூறினார்.

கர்நாடக சிக்கலுக்கு காரணமாக இருந்த பெண் மந்திரி ராஜினாமா : பிரச்னை இனி வராது என முதல்வர் கருத்து

posted in: அரசியல் | 0

பெங்களூரு : கர்நாடகாவில் மீண்டும் ஒரு திருப்புமுனையாக, ரெட்டி சகோதரர்களால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்த பெண் அமைச்சர் ஷோபா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை முதல்வர் எடியூரப்பா உடனடியாக ஏற்று, கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.

குறைந்த விலையில் சர்க்கரை, பருப்பு தர முடிவு*விநாயகரையும் வணங்கினார் முதல்வர் சவான்

posted in: அரசியல் | 0

மும்பை:மகாராஷ்டிராவில் ரேஷன் கடைகள் மூலமாக சர்க்கரை, பருப்பு ஆகிய வற்றை சலுகை விலையில் பொதுமக்களுக்கு வழங்க, மாநில அரசு திட்டமிட் டுள்ளது.மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில், காங்.,- தேசியவாத காங்., கூட் டணி வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற் பட்ட கருத்து வேறுபாட் டால், புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு கேரளப் போலீஸ் வேண்டாம்: முதல்வர் கருணாநிதி

posted in: அரசியல் | 0

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில் கேரளப் போலீûஸ ஈடுபடுத்த வேண்டாம் என்றும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் அந்தப் பணியை ஒப்படைப்பதே சிறந்தது எனவும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோஷ்டி பூசலுக்கு தீர்வு காண ரெட்டி சகோதரர்களுடன் எடியூரப்பா இன்று பேச்சு

posted in: அரசியல் | 0

பெங்களூர் கர்நாடக அரசியலில் அடுத்த கட்ட திருப்பமாக, முதல்வர் எடியூரப்பாவும் எதிர்கோஷ்டியான ரெட்டி சகோதரர்களும் டெல்லியில் இன்று நேருக்குநேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.