முப்படை இருந்தும் பயனில்லை; மீனவர்களுக்கு தேவை துப்பாக்கி: தா.பாண்டியன் பேட்டி

posted in: அரசியல் | 0

ராமநாதபுரம்: இந்தியாவில் முப்படை இருந்தும் தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என இந்திய கம்யூ., மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார். தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறுகையில், “”தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டி வருகின்றனர்.

உள்துறையை இரண்டாக பங்குபோட காங்கிரஸ் முடிவு

posted in: அரசியல் | 0

மகாராஷ்டிர புதிய முதல்வராக அசோக் சவான் நாளை பதவி ஏற்கிறார். உள்துறை யாருக்கு என்ற இழுபறி நீடிப்பதால் அவருடன் துணை முதல்வர் சாகன் புஜ்பால் மட்டும் பதவி ஏற்கிறார். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உள்துறையை கேட்பதால் அத்துறையை இரண்டாக பிரித்து பங்குபோட்டுக் கொள்ள காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

இனி தீவிரவாத தாக்குதல் நடந்தால் பாக்.குக்கு பதிலடி கிடைக்கும்- ப.சிதம்பரம்

posted in: அரசியல் | 0

மதுரை: இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம்: புகார்கள் மட்டுமே ஊழலுக்கு ஆதாரமல்ல- பிரணாப்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக கூறப்படும் புகார்கள் மட்டுமே ஊழலுக்கு ஆதாரம் ஆகிவிடாது என்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.

நதிகள் இணைப்பு விஷயத்தில் எச்சரிக்கை தேவை: பிரதமர் தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:நதிகள் இணைப்பு விவகாரத்தை அரசு மிகவும் எச்சரிக்கையாக கையாளும். சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் வாழ்க்கைச் சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு செயல்படும்,” என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.”இந்துஸ்தான் டைம்ஸ்’ சார்பில் நடந்த தலைமைப் பண்புகள் குறித்த மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

இந்தியர் விசாக்கள் புதுப்பிப்பு உதவ வயலார் ரவி கோரிக்கை

posted in: அரசியல் | 0

மும்பை: “வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் விசாக்கள் புதுப்பிக்கப்படாத போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்’ என, மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

உருப்படியான யோசனையுடன் வந்தால் பேசத் தயார் : மன்மோகன்

posted in: அரசியல் | 0

ஆனந்த்நாக் (காஷ்மீர்) : “”காஷ்மீரில் அமைதியை உருவாக்க உருப்படியான யோசனைகளுடன் வரும் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,” என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

குடியேறிய பகுதியிலேயே ஜாதி சான்று பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு சலுகை

posted in: அரசியல் | 0

சென்னை : ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்தில் குடிபெயர்ந்து வாழும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு, அவர்கள் வாழும் மாவட்டத்திலேயே ஜாதிச் சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.60,000 கோடி இழப்பு: ஆ.ராசா விலக அருண் ஜேட்லி வலியுறுத்தல்

posted in: அரசியல் | 1

தகவல்தொடர்புத்துறையில் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 60000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் மத்திய அமைச்சர் ஆ.ராசா விலக அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.

பொதுத்துறை பங்குகள் : பிரணாப் தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை, பங்குச் சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.