57 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி குறைவு : திருவாரூரில் வேளாண் அமைச்சர் ‘திடுக்’

posted in: அரசியல் | 0

திருவாரூர் : பருவ மழை பொய்த்தது, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாதது போன்ற காரணங்களால் திருவாரூர் மாவட்டத்தில் 57 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி குறைந்துள்ளது என்று, வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்யும்:நிறுவனங்களை தமிழக அரசு ஊக்குவிக்கும்: துணை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

கோவை:””தமிழகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களை அரசு ஊக்குவிப்பதோடு, பல்வேறு வகைகளில் ஆதரவளிக்கும்,” என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.”காக்னிஸன்ட்’ நிறுவனம், 180 கோடி ரூபாய் மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்யும் மையத்தை, கோவையை அடுத்துள்ள கீரணத்தத்தில் அமைத்துள்ளது.

சர்தார் படேலைக் களங்கப்படுத்தியதால் நீக்கம் ஜஸ்வந்த் சிங் விவகாரத்தில் அத்வானி விளக்கம்

posted in: அரசியல் | 0

சிம்லா: பா.ஜ.,விலிருந்து ஜஸ்வந்த்சிங்கை நீக்கியது வேதனை தரும் விஷயம். அதே நேரத்தில், அது அவசியமான முடிவு,” என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

மாணவர்களிடம் மந்திரி கேள்வி: பள்ளிகளில் கபில் சிபல் பார்வை

posted in: அரசியல் | 0

பஞ்ச்குலா (அரியானா):ஒரு நாள் பயணமாக அரியானா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டம் சென்ற, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், அங் குள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளைப் பார்வையிட்டார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந் துரையாடினார். பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மத்திய அரசின் கொள்கைகள் சாதாரண மக்களை காப்பதைவிட முதலாளிகளுக்கு உதவிகரமாக உள்ளது

posted in: அரசியல் | 0

மத்திய அரசின் கொள்கைகள் சாதாரண மக்களைக் காப்பதைவிட பணம் படைத்த முதலாளிகளுக்கு உதவிகரமாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டினார்.

தனியாருக்கு ரயில்வே இடம் விற்பனையில் முறைகேடு : லாலு விவகாரத்தை கிளறுகிறார் மம்தா

posted in: அரசியல் | 0

புதுடில்லி : முந்தைய ஆட்சி காலத்தில், மத்திய ரயில்வேத் துறைக்கு சொந்தமான இடங்கள், சட்டவிரோதமாக தனியாருக்கு விற்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்த, தற்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

காசு வாங்கி ஓட்டுப் போட்டால் கஷ்டத்தைத்தான் அனுபவிக்க வேண்டும் – விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

இளையாங்குடி: வாக்காளர்களே காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள். அப்படி காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டால் திரும்பத் திரும்ப கஷ்டத்தைத்தான் அனுபவிக்க நேரிடும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விரைவில் மதுரையில் ‘சிப்பெட்’ நிறுவனம் : மத்திய அமைச்சர் அழகிரி அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை : “”நவீன வசதிகளுடன் கூடிய, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கழகம் (சிப்பெட்) ஒன்று மதுரையில் விரைவில் அமைக்கப்படும்,” என்று மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.

வி.வி.ஐ.பி.,க்களுக்காக 12 ஹெலிகாப்டர்களை வாங்குகிறது மத்திய அரசு

posted in: அரசியல் | 0

புதுடில்லி: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக இத்தாலி நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது கட்சித் தலைவர்கள் பலர், ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரசாரம் செய்தனர். போதிய அளவில் ஹெலிகாப்டர் கிடைக்காமல், வாடகை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 9-ல் பெங்களூரில் முழு அடைப்பு

posted in: அரசியல் | 0

திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி “பெங்களூர் பந்த்” நடத்தப்படும் என்று பல்வேறு கன்னட சங்கங்கள் அறிவித்துள்ளன.