அழிந்துபோன ‘யானைப் பறவை’ மீண்டும் வருகிறது: முட்டையில் இருந்து உயிர்ப்பிக்க முயற்சி

posted in: உலகம் | 0

மடகாஸ்கர்:உலகின் மிகப் பெரிய பறவையாக கருதப்பட்ட “யானைப் பறவையான’ (எலிபண்ட் பேர்டு) 300 ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு காலனிக்காரர்களால் அழிந்து போனது. மடகாஸ்கரை சேர்ந்த இந்த பறவையினம், அதன் பாதுகாக்கப்பட்ட முட்டையின் ஓட்டில் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.,வின் மூலம் மீண்டும் உயிர் பெறலாம் என கருதப்படுகிறது.

பல் மருத்துவர்களுக்கு ஜப்பானில் கிராக்கி: விசா விதிமுறை தளர்த்தப்படும்

posted in: உலகம் | 0

டோக்கியோ:”ஜப்பானில் முதியவர்கள் மற்றும் குறைந்து வரும் மக்கள் தொகையை கவனிக்க உதவும் வகையில் வெளிநாட்டு நர்சுகள் மற்றும் பல் மருத்துவர்களுக்கான விசா விதிமுறைகளை தளர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது’ என, அந்நாட்டு அரசு தெரிவித்தது.

உள்ளங்கையில் கீபோர்டு: கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி

posted in: உலகம் | 0

லண்டன்:உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம்; இன்டர்நெட் பார்க்கலாம்; இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா? ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது.

1000 தமிழர்களுக்கு செயற்கைக் கால் வழங்க இந்தியா முடிவு

posted in: உலகம் | 0

கொழும்பு:இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையில் கால்களை இழந்த 1,000 தமிழர்களுக்கு, செயற்கை கால்களை வழங்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது : இரான் அதிபர்

posted in: உலகம் | 0

அமெரிக்கா முன்னாளில் ஆதரவு வழங்கியவர்களையே இன்னாளில் இரட்டை வேடம் போட்டு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் எனக்கூறி தாக்குகிறது இரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புலிகளை பலப்படுத்தும் ‘சூப்பர் சக்திகள்’ அபாயம்

posted in: உலகம் | 0

கொழும்பு:””வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளைகளை பலப்படுத்தும் நோக்கத்துடன் சில “சூப்பர் சக்திகள்’ இயங்கி வருகின்றன,” என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறினார்.

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம்: மார்ச் 17-ல் கையெழுத்து

posted in: உலகம் | 0

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மார்ச் 17-ம் தேதி வாஷிங்டனில் கையெழுத்தாகிறது. இதற்காக மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு அமெரிக்கா செல்கிறது.

பொன்சேகாவின் உண்ணாவிரதம் பற்றி எதுவும் தெரியாது: இலங்கை ராணுவம்

posted in: உலகம் | 0

கொழும்பு, மார்ச் 8: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவின் உண்ணாவிரதம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என இலங்கை ராணுவச் செய்தித்தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு நீதிமன்றக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண நடவடிக்கை : மிலிந்த மொரகொட

posted in: உலகம் | 0

வடக்கு நீதிமன்றக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.