மனிதன் உடலில் 6284 தடவை நோய் தாக்கும்: ஆய்வில் தகவல்

posted in: உலகம் | 0

இங்கிலாந்தில் உள்ள ஒரு இணைய தளம் மனி தர்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. 3 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

17 வயதாகும் சிறுவன் சஜீவனின் பரிதாப நிலை: அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியுமா?

posted in: உலகம் | 0

வன்னிப்போர் காரணமாக தனது 2 கைகளையும் இழந்து, இரண்டு தங்கைகளையும் பறிகொடுத்து, சித்தசுவாதீனமுற்ற தந்தையுடனும், தாயாருடன் இந்தியாவில் தங்கியுள்ள சிறுவன் சஜீவன், தனது இழந்த கைகளில் ஒரு கையாவது செயற்கையாக பொருத்தும் நோக்கில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவ முடியுமா? என தனது நிலையை விளக்கி வேண்டுகோள் விடுத்துள்ளளார்.

பொன்சேகாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

posted in: உலகம் | 0

கோலாலம்பூர்,​​ பிப்.​ 11:​ சரத் பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார்.

இந்தியா -​ பாகிஸ்தான் இடையே நதி நீருக்குப் போர்?: இண்டஸ் ஆணையர் மறுப்பு

posted in: உலகம் | 0

லாகூர்,​​ பிப்.​ 10:​ இந்தியா -​ பாகிஸ்தான் இடையே நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் போர் இல்லை என்று இண்டஸ் நதி நீர் பகிர்வு ஆணையத்தின் ஆணையர் ஜி.​ ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

என் கணவரின் உயிருக்கு ஆபத்து: பொன்சேகா மனைவி கண்ணீர்

posted in: உலகம் | 0

கொழும்பு,பிப்.9:​ இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட என்னுடைய கணவர் சரத் பொன்சேகா இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை;​ அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன் என்று அவருடைய மனைவி அனோமா கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் ஈரானில் துவக்கம்

posted in: உலகம் | 0

ஈரான் நாட்டில் இரு இடங்களில் ஏவுகணை உற்பத்தி நிலையங்களை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அகமது வாஹிதி திறந்துவைத்தார்.

இன வெறி : ஆஸி., அமைச்சர் வெளிப்படை

posted in: உலகம் | 0

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் இன வெறி காரணமாகத்தான் நடந்திருக்கிறது என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மீத் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் முன்னாள் முப்படை தலைவர் சரத் பொன்சேகா கைது

posted in: உலகம் | 0

கொழும்பு: இலங்கை ராணுவத்தின் முப்படை தலைவர் பதவியில் இருந்து சரத் பொன்சேகா விலகி, இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டார்.

உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு முன்னதாகவே சதாம் உசேனை அகற்ற பிரிட்டன் ரகசிய திட்டம்: புதிய தகவலால் பரபரப்பு

posted in: உலகம் | 0

லண்டன்:அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்னதாகவே, அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றுவதற்கு, பிரிட்டன் ரகசிய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001 செப்டம்பரில் அல்-குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.

யாழில் இந்தியா தூதுவராலயம் திறக்கும் நோக்கம், தமிழர் பண்பாட்டை சிதைத்து, சமுதாய சீரழிவை செயல்படுத்தவே

posted in: உலகம் | 0

இந்தியா யாழில் தூதுவராலயம் திறக்கும் நோக்கம் இந்திய உளவுபிரிவான “றோ” அங்கே அலுவலகம் திறந்து தமிழர் பண்பாட்டை சிதைப்பதற்கும் தேசியத்தில் உள்ள உள்ள மாணவர்களை அழித்து யாழில் சமுதாய சீரழிவை செயல்படுத்தவுமே என புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.