13வது திருத்தத்திற்கு மேல் செல்லத் தயார்;முன்னாள் புலிகளின் ஆதரவையும் ஏற்பேன்: பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டி

posted in: உலகம் | 0

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியும் எனவும், முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன் என்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கிளிநொச்சிக்கு செல்ல பயந்த சரத் பொன்சேகாவை தைரியப்படுத்திய மஹிந்த: பாதுகாப்புத்தரப்பு

posted in: உலகம் | 0

எனக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று கூறும் பொன்சேகா, கிளிநொச்சிக்குப் போகவே பயந்து கொண்டிருந்தார். அவரை ஜனாதிபதி ராஜபக்சதான் சமாதானப்படுத்தி, தைரியப்படுத்தினார் என்று இலங்கை பாதுகாப்புத்தரப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க பெண்ணுக்கு ரூ.1,500 கோடி இழப்பீடு

posted in: உலகம் | 0

நியூயார்க் : அமெரிக்காவில் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 16 ஆண்டுகள் ஆகியும் நுரையீரல் பாதிப்பால் முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு சிகரெட் நிறுவனம் ரூ.1,500 கோடி இழப்பீடு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிளிநொச்சி வெறுமையாகக் காட்சியளிக்கிறது; தமிழரின் கலாசார அடையாளங்கள் எதுவுமில்லை: ஏ-9 வீதியால் பயணித்த பத்மினி எம்.பி. கவலை

posted in: உலகம் | 0

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ9 பாதையூடாக நேற்றுப் பயணித்தபோது கிளிநொச்சி நகரின் வெறுமையைக் கண்டேன். அந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்த்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

ஆதிக்கத்தை இழக்கிறது அமெரிக்க டாலர், இனி அடுத்தது என்ன…

posted in: உலகம் | 0

அமெரிக்க டாலருக்கு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. உலகிலேயே முன்னணி கரன்சி என்ற அதீத கவுரவம் இனி தொடருமா என்று அலசப்படும் அளவிற்கு, நிலைமை கீழிறங்கி வருகிறது.

உலகின் பலம் வாய்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெற்றிகொள்ள இராணுவத்தினரால் மட்டும் ஒரு போதும் முடியாது: ஊடகத்துறை அமைச்சர்

posted in: உலகம் | 0

உலகில் மிகவும் சக்திபடைத்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெற்றி கொள்ள இராணுவத்தினரால் மட்டும் முடியாது. அதற்குச் சிறந்த அரசியல் தலைமைத்துவமே தேவை. அந்தத்தேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

இந்திய அரசு கவலைப்பட வேண்டாம் சமாதானப்படுத்த முயல்கிறது அமெரிக்கா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:அதிபர் ஒபாமா மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ கூட்டறிக்கைக்கு இந்திய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய அரசை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.சமீபத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்நாட்டின் அதிபர் ஹூ ஜிண்டாவோவை சந்தித்துப் பேசினார்.

புலிகளின் சர்வதேச வலை : இலங்கை செயலர் கவலை

posted in: உலகம் | 0

இலங்கையில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கருதும் அந்நாட்டு அரசு, அவர்களது சர்வதேசத் தொடர்புகளால் கவலை அடைந்துள்ளது. புலித் தலைவர் பிரபாகரனின் மரணத்துக்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு அரசு கருதுகிறது.

சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்

posted in: உலகம் | 0

ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது

பாக்டீரியா மூலம் கண்ணிவெடியைக் கண்டுபிடித்து அமெ. விஞ்ஞானிகள் சாதனை

posted in: உலகம் | 0

மண்​ணில் புதைத்​து​வைக்​கப்​பட்​டுள்ள கண்​ணி​வெ​டி​களை பாக்​டீ​ரியா மூலம் கண்​டு​பி​டித்து அமெ​ரிக்க விஞ்​ஞா​னி​கள் சாதனை படைத்​துள்​ள​னர்.