ஏ.கே.47 துப்பாக்கியைக் கண்டுபிடித்த கலஷ்னிகோவுக்கு 90 வயது – விருதளித்தார் ரஷ்ய அதிபர்

posted in: உலகம் | 0

மாஸ்கோ: இன்று உலகெங்கிலும் உள்ள தீவிரவாதிகள், போராளிகள் கையில் நீக்கமற நிறைந்திருப்பது ஏ.கே.47 துப்பாக்கி. இதைக் கண்டுபிடித்த ரஷ்யாவைச் சேர்ந்த மிகயீல் கலஷ்னிகோவுக்கு 90 வயது பிறந்துள்ளது. இதையொட்டி அவருக்கு ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் விருதளித்துக் கெளரவித்தார்.

3 நாள் தங்க ரூ.21 கோடி முதல் விண்வெளி ஓட்டல் 2012ல் திறப்பு

posted in: உலகம் | 0

பார்சிலோனா, : உலகின் முதல் விண்வெளி ஓட்டல் Ôகேலாக்டிக் சூட்Õ, 2012ல் திறக்கப்படுகிறது. ரூ.14,100 கோடியில் அமைக்கப்படும் அந்த ஓட்டலில் 3 நாள் தங்க கட்டணம் ரூ.20.7 கோடி. விண்வெளி ஆராய்ச்சியில் முன்னாள் பொறியாளர், சேவியர் கிளாரமன்ட்.

அசர்பைஜானில் கழுதையோடு பேட்டி கண்ட ருசிகர வீடியோ பிளாக்: 2 பேருக்கு சிறை

posted in: உலகம் | 0

பாகு: ( அசர்பைஜான்) : அரசுக்கு எதிராக கழுதையுடன் பேட்டி கண்ட வீடியோ தொகுப்பை ஆன்லைன் மூலம் பிளாக்கில் ஒளிபரப்பிய 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு கபேயில் தகராறு செய்ததாக வழக்கு பதியப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்த உத்தரவுக்கு கண்டனமும் எழுந்துள்ளது. கழுதையோடு பேட்டி கண்டு கேலி செய்த இந்த … Continued

பேச்சாளராகி விட்டார் புஷ்: பீஸ் ரூ. 50 லட்சம் தானுங்க

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், இப்போது “காஸ்ட்லி’யான பேச்சாளர் ஆகிவிட்டார். ஒரு முறை மேடையேற 50 லட்சம் ரூபாய் “பீஸ்’ வாங்குகிறார். அமெரிக்காவின் அரசியல், உலக அரங்கில் வித்தியாசமானதுதான். அதன் அதிபர்கள் பலர், தங்கள் பதவிக் காலத்துக்குப் பின், முன் பார்த்த வேலை அல்லது தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்யத் தொடங்கி விடுவர். … Continued

300 ஆண்டு கால பழமையான விழா-5 லட்சம் விலங்குகளை பலியிட தயாராகும் நேபாளம்

posted in: உலகம் | 0

காத்மாண்டு: நேபாளத்தின் பரியாபூர் மாவட்டத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விலங்குகள் பலியிடும் திருவிழா வருகிற 24ம் தேதி தொடங்குகிறது. இதில் ஐந்து லட்சம் விலங்குகளை மொத்தமாக பலி தரப் போகிறார்கள்.

புலிகளுக்கு உயிர் கொடுக்க சில சக்திகள் முயற்சி – திவயின

posted in: உலகம் | 0

யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உயிர் கொடுக்க சில சக்தகிள் முயற்சி மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் இயக்கம் மீண்டும் இயங்குவதாக வெளிக்காட்டும் வகையில் உள்நாட்டில் இயங்கி வரும் சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சுவிஸ் வங்கிகளில் காணப்படும் புலிகளின் சொத்துக்களை அரசுடமையக்குவது தொடர்பில் கவனம் : திவயின

posted in: உலகம் | 0

சுவிஸ்லாந்து வங்கிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் அரசாங்கம் முயற்சிகைள மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதிகளுடன் ஐ.எஸ்.ஐ., தொடர்பு : முஷாரப் ஒப்புதல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு அனைத்து பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உண்டு என, முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் இது குறித்து சி.என்.என்., “டிவி’க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

புலிகள் சார்பு புதிய அரசு இலங்கை கடும் எச்சரிக்கை

posted in: உலகம் | 0

கொழும்பு:”வெளிநாடுகளில் இருந்து செயல்படும் வகையிலான ஒரு அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் புலிகளும், அவர்களது ஆதரவு அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச நாடுகள் இதை அனுமதிக்கக் கூடாது’ என, இலங்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பயங்கரம் – ராணுவ டாக்டர் சரமாரியாக சுட்டு 12 பேர் பலி – 31 பேர் காயம்

posted in: உலகம் | 0

போர்ட் ஹூட் (டெக்சாஸ்): அமெரிக்க ராணுவ தளத்தில், ராணுவ டாக்டர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்தனர்.