கொல்கத்தா விமான நிலையத்தில் ஆயுதங்களுடன் தரை இறங்கிய ஐக்கிய அரபு நாட்டு விமானம்

posted in: உலகம் | 0

ஐக்கிய அரபு நாட்டு விமானம் ஆயுதங்களுடன் கொல்கத்தாவில் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான அபுதாபியில் இருந்து சீனாவில் உள்ள ஹன்யாங் நகருக்கு ஒரு ராணுவ விமானம் நேற்று இரவு புறப்பட்டு சென்றது.

பிலிப்பைன்ஸ் சூப்பர் பெர்ரி கப்பல் மூழ்கியது : 900 பேர் தப்பினர் : 60 பேர் மூழ்கினர்

posted in: உலகம் | 0

மணிலா: பிலிப்பைன்ஸ் அருகே சூப்பர் பெர்ரி- 9 என்ற பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியது . இதில் பயணித்த 968 பேரில் தொள்ளாயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். 60 பேர் மாயமாயினர். 10 பேர் சடலங்கள் மீட்கப்பட்டாலும் பலி எண்ணிக்கை 60 ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸி., மறுப்பு

posted in: உலகம் | 0

புதுடில்லி : “அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத் தில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய முடியாது’ என, ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சரும், துணை பிரதமருமான ஜூலியா கிலார்ட், நம்நாட்டில் ஒரு வாரம் பயணம் மேற்கொண்டார். நேற்று தாயகம் திரும்பும் போது, டில்லியில் நிருபர்களை சந்தித்தார்.

ஆஸ்திரேலியாவில் போலி கல்வி நிறுவனங்களை நம்பி மாணவர்கள் ஏமாறுவதை தூதரகங்கள் தடுக்க வேண்டும்:சுப்ரீம் கோர்ட் கருத்து

posted in: உலகம் | 0

புதுடில்லி: “போலி கல்வி நிறுவனங்களை நம்பி இந்திய மாணவர்கள் ஏமாறுவதை தடுக்க, இந்திய தூதரகமும், ஆஸ்திரேலிய தூதரகமும் உதவ வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

நீர்மூழ்கிகளுக்கான சுரங்கப் பாதையைக் கட்டியமைக்க ஜப்பான் விபுணர்கள் குழு புலிகளுக்கு உதவியது: கொழும்பு நாளேடு

posted in: உலகம் | 0

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலையினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஜப்பானிய நிபுணர்களின் குழு ஒன்றே நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கான சுரங்கப்பாதை ஒன்றைக் கட்டியமைப்பதற்கான உதவிகளைச் செய்தது என கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவைத் தாக்க பெனசிர் ஆவல்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : கடந்த 1990ம் ஆண்டு, பாகிஸ்தானின் அணுஆயுத கூடங்கள் தாக்கப்பட்டால், இந்தியாவின் அணுஆயுத வசதிகளை தாக்க, தயாராக இருக்குமாறு, பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் பெனசிர் பூட்டோ, விமானப் படைக்கு உத்தரவிட்டிருந்தார். இத்தகவலை, அந்நாட்டு ராணுவ முன்னாள் தலைமை ஜெனரல் மிர்சா அஸ்லம் பெக் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் இந்தியாவை நோக்கி 165 ஏவுகணைகள்

posted in: உலகம் | 0

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய 165 ஏவுகணைகளில் ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் மாற்றம் செய்துள்ளது. இந்தியாவை குறி வைத்து இவை அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனா-அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம்

posted in: உலகம் | 0

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்கப்படும் கேள்வி- சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாக தான் இருக்கும். இன்றைய உலக பொருளாதாரத்தில் நடப்பது தான் என்ன?. சீனாவின் இன்றைய உண்மையான நிலை தான் என்ன?. அது பற்றி இப்போது பார்ப்போம்.

ஜி.பி.எஸ்., மூலம் விலை உயர்ந்த வயலின் மீட்பு: இந்திய டாக்சி டிரைவருக்கு வெகுமதி

posted in: உலகம் | 0

நியூயார்க்: அமெரிக்காவில், டாக்சியில் தொலைந்து போன விலை உயர்ந்த பழமையான வயலின், செயற்கைக்கோள் தொடர்புள்ள ஜி.பி.எஸ்., சிஸ்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. நேர்மையான டாக்சி டிரைவரான இந்தியருக்கு, வெகுமதி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மிரட்டுகிறது பன்றிக்காய்ச்சல் : 90 ஆயிரம் பேர் பலியாகலாம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “இந்தக் குளிர் காலத்தில், பன்றிக்காய்ச்சல் நோய் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் பரவி, 20 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படலாம்; 90 ஆயிரம் பேர் பலியாகலாம்’ என, வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.