பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

posted in: Tamil Book Reviews | 0

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்:

“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.”

இந்தப் பாடல் குறிப்பிடும் நூல்கள்

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  4. இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  5. கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  6. களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  7. ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  8. ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  9. திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  10. திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  11. முப்பால் (திருக்குறள்)
  12. திரிகடுகம்
  13. ஆசாரக் கோவை
  14. பழமொழி
  15. சிறுபஞ்சமூலம்
  16. கைந்நிலை
  17. முதுமொழிக் காஞ்சி
  18. ஏலாதி

இந்தப் பாடலில் கைந்நிலை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை

வரிசைஎண்நூல்பெயர்பாடல் எண்ணிக்கைபொருள்ஆசிரியர்
1.நாலடியார்400அறம்/நீதிசமண முனிவர்கள்
2.நான்மணிக்கடிகை101அறம்/நீதிவிளம்பி நாகனார்
3.இன்னா நாற்பது40+1அறம்/நீதிகபிலர்
4.இனியவை நாற்பது40+1அறம்/நீதிபூதஞ்சேந்தனார்
5.திருக்குறள்1330அறம்/நீதிதிருவள்ளுவர்
6.திரிகடுகம்100அறம்/நீதிநல்லாதனார்
7.ஏலாதி80அறம்/நீதிகணிமேதாவியார்
8.பழமொழி நானூறு400அறம்/நீதிமுன்றுரை அரையனார்
9.ஆசாரக்கோவை100+1அறம்/நீதிபெருவாயின் முள்ளியார்
10.சிறுபஞ்சமூலம்104அறம்/நீதிகாரியாசான்
11முதுமொழிக்காஞ்சி10*10அறம்/நீதிகூடலூர்க்கிழார்
12.ஐந்திணை ஐம்பது50அகம்பொறையனார்
13.ஐந்திணை எழுபது70அகம்மூவாதியார்
14.திணைமொழி ஐம்பது50அகம்கண்ணன் சேந்தனார்
15.திணைமாலை நூற்றைம்பது150அகம்கணிமேதையார்
16.கைந்நிலை60அகம் புல்லங்காடனார்
17.கார் நாற்பது40அகம்கண்ணங் கூத்தனார்
18.களவழி நாற்பது40+1புறம்பொய்கையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *