பிரச்னைகளை எழுப்பி அமளி ஏற்படுத்த கட்சிகள் திட்டம்
புதுடில்லி:பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் முடிவு செய்துள்ளதால், அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது.