நொய்டாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவு

நொய்டா: நொய்டா தொழிற்பேட்டையில் குளிர்பதன ஏ.சி., தயாரிப்புக்கு என புதிய பிரிவினை சாம்சங் நிறுவனம் தொடங்கி உள்ளது. மின்சாதன பொருள்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனம் சாம்சங். இந்நிறுவனம் தற்போது, ஏ.சி., விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நொய்டாவில் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவினை தொடங்கியுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் ‌தலைவர் ஜூட்ஷி தொடங்கி வைத்தார்.

புதிய 2 ரூபாய் நாணயம்: ஆர்.பி.ஐ., வெளியிட்டது

சென்னை: கண் பார்வையற்றவர்களுக்கான ‘பிரெய்லி’ முறை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய லூயி பிரெய்லியின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய 2 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்.பி.ஐ.,) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்.எம்.​ மாஜி கூறும்போது,

சாப்ட்வேர், பீபிஓ துறையில் ரூ.2.28 லட்சம் கோடி ஏற்றுமதி

புதுடெல்லி : தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீபிஓ துறையில் இந்த ஆண்டு 1.5 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என நாஸ்காம் அமைப்பு தெரிவித்துள்ளது.

லண்டன் நிதித்துறையில் 48 ஆயிரம் பேர் வேலையிழப்பு

லண்டன் : கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் லண்டனில் 17000 மூத்த நிதித்துறை அலுவலர்கள் உட்பட 48000 பேர் பதவி இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஓபியின் நடமாடும் ஏ.டி.எம்.

சென்னை : தமிழ்நாட்டில் முதல்முறையாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) நடமாடும் ஏடிஎம் மையத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முட்டைக்கு மைனஸ் ரேட் வழங்கும் என்.இ.சி.சி., : அதிர்ச்சியில் புரோக்கர்கள், வியாபாரிகள்

நாமக்கல்: முட்டையின் தேவையைப் பொறுத்து, மைனஸ் ரேட் வழங்க என்.இ.சி.சி., முடிவு செய்வதால், முட்டை வியாபாரிகள், புரோக்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 கோடியை தாண்டியது

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 கோடியை தாண்டி உள்ளது.

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் அதிக ஆள்சேர்க்க திட்டம்

நியூயார்க் : அமெரிக்காவில் உள்ள 3ல் ஒரு ஐடி நிறுவனம் இந்த ஆண்டில் புதிதாக அதிகம் பேரை வேலைக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளன.

உதிரிபாக விலை அதிகரிப்பு டிவி, ஏசி, பிரிட்ஜ் 5% விலை உயர்கிறது

புதுடெல்லி: டிவி, ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்த எல்ஜி, கோத்ரெஜ், வீடியோகான், வேர்ல்பூல் ஆகிய முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.