மதிப்பெண் சான்றிதழில் இனி போட்டோ : போலிகளை ஒழிக்க கல்வித்துறை அதிரடி

posted in: கல்வி | 0

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. போலிச் சான்றிதழ்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்டம், வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்பாக்கம் உட்பட அணுமின் நிலையங்களுக்கு பயங்கரவாத தாக்குதல் அபாயம் : கடும் பாதுகாப்பு

posted in: மற்றவை | 0

புதுடில்லி : அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, இந்தியாவில் அணுமின் நிலையங்கள் உள்ள சில மாநிலங்களுக்கு விஜயம் செய்ததாக வெளியான தகவல்களை அடுத்து, நாடு முழுவதும் உள்ள அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இடம் பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் பிரசாரம்

posted in: உலகம் | 0

கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பினரும், அதன் ஆதரவாளர்களும் உலகம் தழுவிய பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

பெயர் மாறி மீண்டும் உதயமான புதினம் இணையத்தளம்!

posted in: உலகம் | 0

வன்னி: ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்ற புதினம் இணையத்தளம் தற்போது புதிய பெயரில் மீண்டும் உதயமாகியுள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து ராமானுஜம் மாற்றப்பட்டது ஏன்?

posted in: மற்றவை | 1

லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பாக செயல்பட்ட கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டதற்கு, அவரது செயலை ஏற்காதவர்கள் மேற்கொண்ட மறைமுக எதிர்ப்பே காரணம் என, பரபரப்பாக பேசப்படுகிறது.

ரூ.2.2 லட்சம் கோடி மருத்துவ மோசடி்

வாஷிங்டன் : போலி ஆவணங்களின் அடிப்படையில், மருத்துவ செலவுக்காக அமெரிக்கா ரூ.2.2 லட்சம் கோடி செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அசோசியேட்டடு பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு வழங்கியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஆப்கானிய அதிபர் முழுமையாக நிர்வாகத்தைப் பொறுப்பேற்காத வரை அமெ. உதவி கிட்டாது : ஹிலாரி

posted in: உலகம் | 0

ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயும் அவருடைய அமைச்சர்களும் தமது நிர்வாகத்தை முழுமையாகப் பொறுப்பேற்காத வரையில், அமெரிக்கா கூடுதலான சிவிலியன் உதவிகளை வழங்காது”. இவ்வாறு அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.

வெளிநாடுகளில் வேலைக்காக பார்மசி பாடத்திட்டம் மாற்றம்

posted in: மற்றவை | 0

ஸ்ரீவில்லிபுத்தூர்:”வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையில், பார்மசி பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும்’ என, தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவர் சின்னசாமி தெரிவித்தார்.

தட்டுப்பாடின்றி நிலக்கரி தேவை : ஆற்காடு வீராசாமி வேண்டுகோள்

posted in: அரசியல் | 0

சென்னை : “”தமிழகத்தில் அமையவுள்ள மூன்று அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி தட்டுப்பாடின்றி கிடைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என டில்லியில் நடந்த மாநாட்டில், ஆற்காடு வீராசாமி வேண்டுகோள் விடுத்தார். டில்லியில் நேற்று நடந்த மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில், தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதாவது: மத்திய அரசு பொறுப்பேற்ற … Continued

சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ஜனாதிபதி பிரதிபா நம்பிக்கை

posted in: அரசியல் | 0

புதுடில்லி:சந்திரனுக்கு ஆளில்லாத விண்கலமான சந்திரயான்1 அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,” என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நம்பிக்கை தெரிவித்தார்.டில்லியில், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச வர்த்தக கண்காட்சியை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைத்தார்.