இலவச கண் சிகிச்சையில் 11 பேர் கண்பார்வை இழப்பு

posted in: மற்றவை | 0

சென்னை : இலவச கண்சிகிச்சை செய்து கொண்ட 11பேர் கண்பார்வை இழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் கண்நோய்க்காக 26 பேர் இலவச கண்சிகிச்சை முகாமில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். சிகிச்சை முடிந்த சில நாட்களில் 11 பேருக்கு கண்களில் எரிச்சலும், பார்வைக் குறைபாடும் இருந்துள்ளன. படிப்படியாக பார்வையும் பறிபோய்விட்டது.

பொதுத்துறை பங்குகள் : பிரணாப் தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை, பங்குச் சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

22 ரூபாய் டிக்கெட்… 14 ஆண்டுகளாக ஒரே படம்… : மும்பையில் இப்படி ஒரு சாதனை

posted in: மற்றவை | 0

மும்பை : மும்பையிலுள்ள ஒரு தியேட்டரில், 14 ஆண்டுகளாக மேட்னி ஷோவில் ஒரே படத்தை “ஓட்டி’க் கொண்டிருக்கின்றனர். இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. “மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில், “தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

புத்தம் புதிய பாலிவுட் படங்கள் டி.டி.எச்.,ல் இனி

புதுடில்லி: ‘இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன…’ என்று ‘டிவி’ சேனல்கள் தான் போடுமா என்ன… திரைக்கு வந்து சில நாட்களான புத்தம் புதிய பாலிவுட் படங்களை இனி டி.டி.எச்., மூலம் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்தே பார்க்கலாம். கேபிள் ஆபரேட்டர்களுக்கு மட்டுமல்ல, ‘டிவி’ சேனல்களுக்கும் கூட டி.டி.எச்., இப்போது … Continued

பலமாடிக் குடியிருப்பு வீடு : விலை 300 கோடி ரூபாய்

posted in: உலகம் | 0

ஹாங்காங் : பலமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை 300 கோடி ரூபாய்; என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மை தான்.ஹாங்காங்கில் அமைந்துள்ள மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்று இப்படி விலை வைத்து விற்றுள்ளது. இது உலகளவில் சாதனையாக கருதப்படுகிறது.

சிறையில் காலம்தள்ளும் விசாரணைக் கைதிகளின் கதிக்கு விமோசனம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : அப்பீல் மனு விசாரிக்கப்படாத தண்டனை கைதிகளும், விசாரணைக்கே அழைக்கப்படாத விசாரணை கைதிகளும், தண்டனை காலத்தில் பாதிக்கு மேல் அனுபவித்து வருகின்றனர். இந்த அவல நிலையை உடனே கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தும்படி சட்ட அமைச்சருக்கு பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.

போலி கிரெடிட் கார்டு கும்பல் கண்டுபிடிப்பு : இலங்கையைச் சேர்ந்த வாலிபர் சிக்கினார்

posted in: மற்றவை | 0

சென்னை : போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து, அவற்றை பயன்படுத்தி பொருட்களை வாங்கி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வாலிபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் உள்ள, டயானா கோல்ட் ஸ்டோர்ஸ் மேலாளர் செந்தில். இவரது கடைக்கு, ஹரிகுமார் என்பவர் கடந்த மாதம் 17ம் தேதி காலை … Continued

ராஜ் ராஜரட்னம் புலிகளுக்கு நிதிவழங்கினார்: கே.பி கூறுகிறார் – இலங்கை பாதுகாப்பு அமைச்சர்

posted in: உலகம் | 0

சமீபத்தில் நிதி மோசடி தொடர்பாக அமெரிக்க FBI யால் கைதான தொழிலதிபர் ராஜ் ராஜரட்னம், விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கினார் எனக் கே.பி கூறியுள்ளதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் புதிய திட்டம் அறிமுகம்

மதுரை: ‘சிம்ப்ளி ரிலையன்ஸ் பிளான்’ என்ற பெயரில் புதிய மொபைல் திட்டத்தை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்நிறுவன தமிழக தலைவர் அஜய் அவஸ்தி, மதுரை பொறுப்பாளர் ஆன்டனி ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமர் ஆகும் தகுதி ராகுலுக்கு உண்டு சொல்கிறார் திக் விஜய்

posted in: அரசியல் | 0

வாரனாசி:பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும் ராகுலுக்கு உள்ளது. அவரை உ.பி., முதல்வர் பதவிக்கு முன்னிலைப் படுத்துவதாக கூறப்படுவது தவறான தகவல்’என., காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறினார்.காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியதாவது:மூன்று மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் பா.ஜ., கூட்டணி படு தோல்வி அடைந்துள்ளது.